Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தற்கொலைக்கு முயலும் வாய்ப்பு - தீவிர கண்காணிப்பில் ஜாக்சன் டாக்டர்
ஜாக்சனின் மறைவுக்கு டாக்டர் கான்ராட் முர்ரே கொடுத்த சக்தி வாய்ந்த, அபாயகரமான மருந்துகளே காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இதுதொடர்பாக முர்ரேவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அவரது வீடுகளையும் சோதனையிட்டுள்ளனர்.
இந்த நிலையில், முர்ரே மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போலீஸ் வசம் போதிய ஆதாரங்கள் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
கைதாவது நிச்சயம் என்று முர்ரேவுக்கும் உறுதியாகத் தெரிந்து விட்டதால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என அவரது நண்பர்கள் அஞ்சுகின்றனர்.
இதையடுத்து லாஸ் வேகாஸ் நகரில் உள்ள முர்ரேவின் வீட்டை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 55 வயதாகும் முர்ரேவின் வீட்டுக்கு அருகில் இருப்போரும் முர்ரேவின் நிலை குறித்து கவனத்துடன் உள்ளனர்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், முர்ரே கிட்டத்தட்ட உடைந்து போய் விட்டார். அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாது. வெளியேறக் கூடிய நிலையும் இல்லை.
உலகிலேயே மிகவும் வெறுக்கத்தக்கத மனிதராக இப்போது முர்ரே மாறியுள்ளார் என்றார்.