Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் இன்னும் அவரை லவ் பண்ணுறேன்...வழக்கிற்கு பிறகு ஆம்பர் ஹெர்ட் வெளியிட்ட பரபரப்பு கருத்து
வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் பல பாகங்களில் ஜேக் ஸ்பேரோ என்ற கேரக்டரில் நடித்து உலக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர்.
50 வயதாகும் ஜானி டெப், தன்னை விட 25 வயது சிறியவரான ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்ட்டை 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 15 மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
விவாகரத்திற்கு பிறகு 2018 ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவர், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி ஜானியின் பெயரை குறிப்பிடாமல் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த கட்டுரை தொடர்பாக முன்னாள் மனைவி ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜானி.
ஜானி தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய கோர்ட், ஜானிக்கு இழப்பீடு தொகையாக 78 கோடியும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட்டது. முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் தனக்கு கிடைத்த வெற்றியை பல கோடி செலவழித்து, தனது நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினார் ஜானி.
இந்நிலையில் வழக்கிற்கு பிறகு முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார் ஆம்பர் ஹியர்ட், பல பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், நான் சரியானதை தான் செய்தேன். என்ன நடந்தது, இதன் மூலம் நான் என்னவெல்லாம் பெற்றேன் என அனைத்தையும் என் மகளிடம் சொல்வேன் என்றார்.
உங்களின் எதிர்காலத்தை தற்போது எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்த ஆம்பர், உங்கள் அனைவருக்குமே தெரியுமே நான் முழு நேர தாயாக இருக்கிறேன். அதை தொடர போகிறேன் என்றார். ஒருநாள் உங்கள் மகளிடம் இவை அனைத்தையும் சொல்ல வேண்டி வந்தால் என்ன சொல்வீர்கள் என ஆம்பரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எதுவாக இருந்தாலும் நான் சரியானதை தான் செய்தேன். எனக்காகவும் உண்மைக்காகவும் நிற்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன். எதையும் என் மகளிடம் மறைக்க போவதில்லை. நிச்சயம் ஒருநாள் அவளிடம் அனைத்தையும் சொல்வேன் என்றார்.ஆம்பரின் இந்த பரபரப்பு பேட்டி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முதல் பாகம் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், பேட்டியில் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பர், அக்குவாமேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். கடந்த ஆண்டு தான் தனது மகளின் பெயரை ஆம்பர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.
என்ன மனுஷன்யா ஜானி டெப்.. காசுக்காக கேஸ் போடல.. எக்ஸ் மனைவி அவ்வளவு பணத்தையும் தர தேவையில்லையா?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!