Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேன்சர் அபாயம்: மார்பகங்களை அடுத்து கர்பப்பையை அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜூலி
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்ததால் அவரின் கருப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, நடிகர் பிராட் பிட் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் 3, தத்தெடுத்த குழந்தைகள் 3 என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளார்கள். ஜூலியின் தாய் மார்ஷலின் பெட்ர்னாட் மார்பக புற்றுநோயால் பலியானார். இந்நிலையில் ஜூலிக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
ஜூலிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 87 சதவீத வாய்ப்பும், கர்பப்பை புற்றுநோய் ஏற்பட 50 சதவீத வாய்ப்பும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மார்பகம் அகற்றம்
புற்றுநோய் அபாயம் இருந்ததால் கடந்த 2013ம் ஆண்டு ஜூலி அறுவை சிகிச்சை மூலம் தனது 2 மார்பகங்களையும் அகற்றினார்.
கர்பப்பை
கர்பப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் இருந்ததால் அதையும் அகற்ற முடிவு செய்தார் ஜூலி.
ஆபரேஷன்
அறுவை சிகிச்சை மூலம் ஜூலியின் கர்பப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
குழந்தைகள்
இனி என்னால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது. என் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் என நினைக்கிறேன். இது வாழ்வில் ஒரு பகுதி. இதற்காக பயன்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஜூலி தெரிவித்துள்ளார்.