Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டி காப்ரியோவுடன் - ஷாரூக்: 'கூட்டணி'யில் குழப்பம்!!
ஆனால் இப்போது இந்த படம் உருவாகுமா... அப்படியே எடுக்கப்பட்டாலும் அதில் டி காப்ரியோ நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கதையை ஷாரூக்தான் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸீஸிடம் கூறினாராம். ஷாரூக் கடத்தல் மன்னனாகவும், லியனார்டோ காப்ரியோ போலீஸாகவும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தனர்.
90களில் சோமாலியாவில் அமைதிப் படையில் பணிபுரிகிறார்கள் இந்தியரான ஷாருக்கும் அமெரிக்கரான லியனார்டோவும். ஒருமுறை ஷாருக்கின் மனைவியின் உயிரைக் காப்பாற்றுகிறார் லியனார்டோ. பின்னர் லியனார்டோவும் ஷாருக்கும் அவரவர் நாடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.
லியனார்டோ அமெரிக்காவில் போலீஸ்காரராக வேலை செய்ய, ஷாருக் இந்தியாவில் கடத்தல் செய்யும் தாதாவாக உருவாகிறார். பல வருடங்கள் கழித்து, குடும்ப சூழல் காரணமாக இந்தியாவில் இருக்கும் தன் நண்பனிடம் உதவி கேட்க வருகிறார் லியனார்டோ.
தன் மனைவியின் உயிரைக் காபாற்றிய நண்பனாக இருந்தாலும், தன் தொழிலுக்கு எதிரியான லியனார்டோவை ஷாருக் எப்படி கையாள்கிறார் என்பதே கதை. பழைய நண்பர்கள் இருவருக்குமிடையே நடக்கும் போராட்டம்தான் இந்தப் படத்தின் ஹைலைட்.
இப்படத்தின் திரைக்கதையை முஷ்டாக் ஷேக் எழுத, பால் ஷ்ரேடர் இயக்குகிறார்.
உலகப் புகழ் பெற்ற இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸீஸ் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
டி காப்ரியோ விலகல்?
இப்போது இந்தக் கதையில் டி காப்ரியோ நடிக்கமாட்டார் என்று நியூயார்க்கில் உள்ள அவரது ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.
படம் துவங்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், அதற்குள் டி காப்ரியோவை சம்மதிக்க வைத்துவிட முடியும் என நம்புவதாக படத்தின் எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!