Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
Johnny Depp: ஒரு மணி நேரத்தில் ரூ. 28 கோடி சம்பாதித்த ஜானி டெப்.. அவருக்குள்ள இப்படியொரு திறமையா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையில் வெற்றிப் பெற்ற ஜானி டெப், தற்போது வெறும் ஒரு மணி நேரத்தில் 28 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் ஜேக்ஸ் பேரோவாக நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ஜானி டெப்.
ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கும் இடையே ஏற்பட்ட வழக்கு மோதல்கள் காரணமாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் அடுத்த பாகத்திலேயே அவர்
2,300 கோடி கொடுத்தாலும் உங்க சகவாசமே வேண்டாம்.. டிஸ்னிக்கு நோ சொன்ன 'மானஸ்தன்’ ஜானி டெப்!
மனைவிக்கு எதிரான வழக்கு
ஜானி டெப் ஒரு மோசமான பெண் பித்தர் என இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். அந்த வழக்கு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ஜானி டெப்புக்கு சாதகமாகவும் ஆம்பர் ஹெர்ட்டுக்கு பாதகமாகவும் தீர்ப்பு வந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்த்யது.
காசு இல்லை
சுமார் 10 மில்லியன் டாலர்கள் அபராதமாக ஜானி டெப்புக்கு அவரது மனைவி ஆம்பர் ஹெர்ட் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்ட நிலையில், தன்னிடம் அந்த அளவுக்கு பணமே இல்லை என சமீபத்தில் புலம்பித் தள்ளி இருக்கிறார் ஆம்பர் ஹெர்ட். அதே சமயம் வழக்கின் மூலம் தன்னுடைய வாழ்க்கை திரும்பவும் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த ஜானி டெப் தொடர்ந்து அந்த வெற்றியை பெரியளவில் கொண்டாடி வருகிறார்.
ஒரு மணி நேரத்தில் 28 கோடி
இந்நிலையில், சமீபத்தில் தனது ஓவியங்களை இன்ஸ்டாகிராமில் விற்பனைக்கு கொண்டு வர ஒரு மணி நேரத்தில் 3 மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்துள்ளார் ஜானி டெப். இந்திய மதிப்பில் 28 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கேஸ்ட்டல் ஃபைன் ஆர்ட்ஸ் 37 கேலரியின் 780 பிரின்டுகளை வாங்க கூட்டம் அலைமோதிய நிலையில், ஒரே மணி நேரத்தில் இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளார்.
பிரபலங்களின் ஓவியம்
59வயதாகும் ஜானி டெப் தனக்கு இருக்கும் ஓவியத் திறமையை இப்போது தான் இந்த அளவுக்கு வெளிப்படுத்தி உள்ளார். ஹாலிவுட் நடிகர் அல்பசினோ, பாப் சிங்கர் பாபி டைலான் உள்ளிட்டோரின் உருவப் படங்கள் அடங்கிய ஓவியத்தைத் தான் அவர் வரைந்துள்ளார். ஒரு ஓவியத்தின் விலை 3,950 பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.