Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆஸ்கர் மேடையில் ஆத்திரத்தில் அறைந்த வில் ஸ்மித்.. இப்படியொரு தண்டனையை கொடுத்த அகாடமி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆத்திரம் அழிவைத் தரும் என்பதற்கு உதாரணமாக மாறிவிட்டார் நடிகர் வில் ஸ்மித்.
இத்தனை ஆண்டுகள் போராடி இரு முறை ஆஸ்கர் நாமினியாக மாறி விருது கிடைக்காமல் இருந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்திற்காக இந்த ஆண்டு வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
பிக்பாஸ் அல்டிமேட் ஃபைனலிஸ்ட் ஆன 3 பேர்... டைட்டிலை வெல்லப் போவது யார்?
ஆனால், அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு அவரது செயல் அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
ஆஸ்கர் அறை
94வது ஆஸ்கர் விருது விழா மேடையில் தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து காமெடி நடிகர் கிறிஸ் ராக் அடித்த கமெண்ட்டால் கடுப்பான வில் ஸ்மித், மேடை ஏறி அவரை அடித்து விட்டு வந்தது மிகப்பெரிய அதிர்வலையை உலகளவில் ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் வில் ஸ்மித் செய்த செயல் சரியானது என கொண்டாடிய பலரும், அதன் பிறகு வில் ஸ்மித் ஆத்திரப்பட்டு அடித்தது தவறான செயல் என ட்ரோல் பண்ண தொடங்கினர்.
கிறிஸ் ராக் சாமர்த்தியம்
வில் ஸ்மித் ஆத்திரத்தில் அடித்த போதும், அமைதியாக சிரித்துக் கொண்டு கிறிஸ் ராக் நடந்து கொண்டதால், அவர் இந்த அளவுக்கு பிரச்சனையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். வில் ஸ்மித் அடித்தவுடன் அவரும் பதிலுக்கு ஆத்திரப்பட்டு அடித்திருந்தாலோ அவரை கெட்ட வார்த்தையால் திட்டி இருந்தாலோ அவருக்கும் சிக்கல் ஏற்பட்டு இருக்கும்.
விலகிய வில் ஸ்மித்
ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் அகாடமியில் இருந்து விலகுவதாக நடிகர் வில் ஸ்மித் அதிரடியாக அறிவித்தார். ஆஸ்கர் மேடையிலேயே சிறந்த நடிகருக்காக விருது வாங்கிய போதும், தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினார். ஆனால், வில் ஸ்மித்தை மன்னிக்காமல் அவருக்கு அகாடமி மிகப்பெரிய தண்டனையை விதித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு தடை
ஆஸ்கர் விருது விழாக்களில் இனி 10 ஆண்டுகளுக்கு நடிகர் வில் ஸ்மித் பங்கேற்க முடியாது. அது மட்டுமின்றி அகாடமி சார்பாக நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் நேரடியாகவோ விர்ச்சுவலாகவோ பங்கேற்க கூடாது என அகாடமியை சேர்ந்த நாட்டாமைகள் ஒன்று கூடி வில் ஸ்மித்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போல தண்டனை கொடுத்துள்ளனர்.
ஆஸ்கர் பறிக்கப்படுமா
பாலியல் புகாரில் சிக்கிய தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனின் ஆஸ்கர் விருது பறிக்கப்பட்டது போல வில் ஸ்மித்தின் ஆஸ்கர் விருதையும் திரும்ப பெற வேண்டும் என சிலர் அகாடமிக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், சிறந்த நடிப்புக்காக வில் ஸ்மித் வாங்கிய விருதை பறிப்பது உரிய செயல் அல்ல என்றும் இந்த தண்டனை அவருக்கு சரியானதாக இருக்கும் என்றும், 10 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ஆஸ்கரில் பங்கேற்க விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. ரஜினி மகளின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் விஜய் மகன்?
-
செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி