Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ராஜேந்தரின் புதுப் படம்-ஜோடி 2!
ஈரோட்டுக்கு வந்திருந்தார் டி.ராஜேந்தர் (விஜய டி.ராஜேந்தர் என்ற பெயரை மறுபடியும் டி.ராஜேந்தர் என்றே மாற்றி விட்டார் டி.ஆர்.). அங்கு செய்தியாளர்களிடம் தனது அடுத்த படம் குறித்து அவர் கூறுகையில்,
அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தபடத்தில் மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும்.
ஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும். இதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும்.
அடுத்து குறளரசன்!
இந்த படம் முடிந்த பிறகு குரளரசனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்க உள்ளேன்.
சிம்பு யாரைக் காதலித்தாலும் ஓ.கே.!
சிம்பு அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் யாரை காதலித்தாலும் அதை நான் ஏற்று அவருக்கு திருமணம் செய்து வைப்பேன். காதலிப்பது பெரிய தவறு இல்லை என்றார் ராஜேந்தர்.
பின்னர் அரசியல் குறித்தும் பேசினார் ராஜேந்தர். அவர் கூறுகையில், லட்சிய தி.மு.க. யாரையும் தேடிப்போகாது. வருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். எங்களுக்கு கூட்டணி முக்கியம் அல்ல. கொள்கை தான் முக்கியம் என்றார்.
மேலும் பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர். இதையும் அவரே தெரிவித்தார்.