Just In
- 19 min ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 40 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 56 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
Don't Miss!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- News
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிக்க வந்திருந்தால் என்னை ஓரமா உட்கார வச்சிருப்பாங்க! - எல் ஆர் ஈஸ்வரி

1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவருக்கு வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-30 மணிக்கு, சென்னை காமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.
இதையொட்டி எல்.ஆர்.ஈஸ்வரி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், "1958-ம் வருடம், 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்துக்காக, இவரேதான் அவரு...அவரேதான் இவரு'' என்ற பாடலை முதன்முதலாக பாடினேன். சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த 'பாசமலர்' படத்தில் நான் பாடிய வாராயோ தோழி வாராயோ'' என்ற பாடல்தான் என்னை பிரபலமாக்கியது.
அந்த காலத்தில் எனக்கும் சக பாடகியான பி சுசீலாவுக்கும் போட்டி இருந்தது உண்மைதான். ஆனால், எங்களுக்குள் பொறாமை இருந்ததில்லை.
எனக்கு எல்லா இசையமைப்பாளர்களையும் பிடிக்கும். குறிப்பாக, கே.வி.மகாதேவனை ரொம்ப பிடிக்கும். இப்போது பாட வரும் புதிய பாடகிகள், அவர்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள்.
இப்போது வரும் பாடல்களில், பாடல் வரிகளை விட வாத்திய கருவிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மைதான். எதுவோ தேய்ந்து எதுவோ ஆகிவிட்ட கதை போல் ஆகிவிட்டது.
'சிவந்த மண்' படத்தில் இடம்பெற்ற பட்டத்து ராணி பாடலை கேட்டுவிட்டு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்னை பாராட்டியது இன்றும் பசுமையாக என் மனதில் உள்ளது.
பாடும்போது, உணர்ச்சிகரமாக நான் ஆடிப்பாடுவதைப் பார்த்து படத்தில் நடித்திருக்கலாமே என கேட்கிறார்கள். நான் ஏன் நடிக்கணும்? நடிகையாக இருந்திருந்தால், வயசாகிடுச்சி என்று ஓரமாக உட்கார வச்சிருப்பாங்க. நல்ல வேளை அந்த தப்பை நான் பண்ணலை," என்றார்.