twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ்!

    By Shankar
    |

    Harris Jayaraj
    கோவையில் அக்டோபர் 16-ந் தேதி ஹாரிஸ் ஜெயராஜின் முதல் மேடை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், "2001ம் ஆண்டு மின்னலே படம் மூலம் அறிமுகமானேன். இப்போது 2011ல் அடியெடுத்து வைத்துள்ளேன். இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் ரசிகர்களை சந்திக்கவில்லை. அதற்கு நேரமின்மையே காரணம். இப்போது தான் அதற்கான நேரம் கிடைத்துள்ளது.

    டெக்பிரன்ட் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் வரும் அக்டோபர் 16-ந் தேதி இசை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

    இதில் முன்னணி பாடகர்கள் கார்த்திக், ராகேஷ் ஐயர், ஹரிஷ்ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், கிரிஷ், சின்மயி, ஸ்ரீலேகா பார்த்த சாரதி உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.

    மேலும் சீனா மற்றும் வடமாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

    மேடை நிகழ்ச்சி வடிவமைப்பு ஆகிய பணிகளை பட இயக்குனர் விஜய் கவனிகிறார்," என்றார்.

    நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், டிக்கெட் கட்டணம் ரூ. 500, ரூ. 1000, ரூ. 2000, ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    English summary
    Leading music director Harris Jayaraj is going to conduct his first ever stage programme on October 16 in Coimbature town.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X