Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ்!
இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், "2001ம் ஆண்டு மின்னலே படம் மூலம் அறிமுகமானேன். இப்போது 2011ல் அடியெடுத்து வைத்துள்ளேன். இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் ரசிகர்களை சந்திக்கவில்லை. அதற்கு நேரமின்மையே காரணம். இப்போது தான் அதற்கான நேரம் கிடைத்துள்ளது.
டெக்பிரன்ட் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் வரும் அக்டோபர் 16-ந் தேதி இசை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் முன்னணி பாடகர்கள் கார்த்திக், ராகேஷ் ஐயர், ஹரிஷ்ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், கிரிஷ், சின்மயி, ஸ்ரீலேகா பார்த்த சாரதி உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.
மேலும் சீனா மற்றும் வடமாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
மேடை நிகழ்ச்சி வடிவமைப்பு ஆகிய பணிகளை பட இயக்குனர் விஜய் கவனிகிறார்," என்றார்.
நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், டிக்கெட் கட்டணம் ரூ. 500, ரூ. 1000, ரூ. 2000, ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.