மறுபடியும் ஏன் சீரியல்.. சூப்பர் விளக்கம் கொடுத்த நடிகர் அமித் பார்கவ்.. வைரலாகும் பேட்டி!
சென்னை: வித்தியாசமான தோற்றத்தில் தலையில் கிரீடம், கையில் வில் அம்பு எல்லாம் வைத்துக் கொண்டு புதிய செட்டப்பில் பேட்டிக் கொடுத்துள்ள நடிகர் அமித் பார்கவ்வின் அதிரடி பேட்டி வெளியாகி உள்ளது.
திருமதி ஹிட்லர் எனும் புத்தம் புதிய சீரியலுக்காக பக்காவாக ரெடியாகி இருந்த நடிகர் அமித் பார்கவை ஷூட்டிங் ஸ்பாட்டிலே மடக்கி பிடித்து இந்த பேட்டி எடுக்கப்பட்டது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விரிவாக அமித் பார்கவ் பேசிய பாகம் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், திருமதி ஹிட்லர் சீரியல் பற்றி பேசிய பாகம் தற்பொது வெளியாகி உள்ளது.
பிரியா பவானி சங்கர் உடன் இவர் இணைந்து நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் வேற லெவலில் பிரபலமானது.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அமித் பார்கவ், மிருதன், என்னை அறிந்தால், குற்றம் 23 என ஏகப்பட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் பார்கவ்வின் மனைவி ஸ்ரீரஞ்சனியும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு பேட்டி கொடுத்திருந்த அமித் பார்கவ், இதற்கு மேல் சின்னத்திரையில் தான் நடிக்கப் போவதில்லை. ஒடிடி மற்றும் திரைப்படங்கள் தான் எனக் கூறியிருந்தார்.
அந்த கேள்வியை அவரிடம் எழுப்பிய நிலையில், கொரோனாவால் சினிமா உலகமே மாறிவிட்டது என்றும், சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித் தனம் என சூப்பரான விளக்கம் கொடுத்துள்ள பேட்டியை கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











