அவங்க சப்போர்ட் எனக்கு தேவையில்ல.. தேவயானியால் எனக்கு என்ன பண்ண முடியும்.. ராஜகுமாரன் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தேவயானி நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, தெனாலி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன.
நடிகை தேவயானி ராஜகுமாரன் இயக்கி நீ வருவாய் என என்ற படத்தை இயக்கிய போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இனியா,பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி வருகிறார். தற்போது ராஜகுமாரன், 'இமயா நேச்சுரல்ஸ்' என்ற பெயரில் 100 சதவீதம் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களை உருவாக்கி, அவற்றைச் சந்தைப்படுத்தும் ஒரு புதிய பிசினசை தொடங்கி உள்ளார்.

ராஜகுமாரன் பேட்டி: இதுகுறித்து,Trend Talks சேனலுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், தேவயானிக்கு நான் சப்போட்டாக இருக்க வேண்டும், எனக்கு சப்போட்டா இருக்கவா தேவயானி இங்கே வந்தார்கள். தேவயானிக்கு தான் என் சப்போட் 100 நூறு சதவீதம் தேவை, எனக்கு அவங்க சப்போட் தேவையில்லை, அவங்களால் எனக்கு என்ன சப்போட் பண்ண முடியும். என்னுடைய வேலைக்கு அவங்களால் எந்த சப்போட்டும் பண்ண முடியாது. ஆனால், அவங்களுடைய வேலைக்கு என்னால் சப்போட் பண்ண முடியும். உதாரணத்திற்கு இன்னு அவங்க ஷூட்டிங் போய் இருக்கிறார்கள். இன்னைக்கும் அவங்களுக்கு ஏதாவது அக்ரீமெண்ட் வந்தா, நான் அவங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வேன். அங்களுக்கு நான் சப்போட் பண்றதால தான், தேவயானினு ஒருத்தர் இன்னும் இருக்காங்க. இன்னும் ஆறு வருடம் கழித்து 'இமயா நேச்சுரல்ஸ்' தேவயானிக்கே சப்போர்ட்டா இருக்கும் என்று ராஜகுமாரன் இந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











