Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 3 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலையாள திரைத் துறை... கதையுடன்.. கலையையும் சேர்த்து வளர்க்கிறது.. அஸ்வின் குமார்
சென்னை : மலையாள திரைத்துறை சிறந்த கலையை பெருமளவில் வரவேற்கிறது என்று அஸ்வின் குமார் கூறினார்.
நடிகர் அஸ்வின் குமார் துருவங்கள் பதினாறு மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சென்றடைந்தவர். இவர் தற்போது அதிகபடியான மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் முதல் படம் துருவங்கள் பதினாறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் இவரின் முதல் மலையாளப் படமான ஜாக்கோப்பின்டே சொர்கராஜியம் படம் முதலில் வெளியாகி மலையாள திரைத்துறையில் பெரிய பெயரை பெற்று தந்தது அதை தாண்டி துருவங்கள் பதினாறும் மலையாள படம் நல்ல வெற்றியை பதிவு செய்ய தற்போது தொடர் மலையாள படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகர் அஸ்வின் குமார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது மலையாள திரைத்துறையில் நல்ல கதையையும் கலையையும் வளர்க்க பாடுபடுகிறார்கள். அங்கு அதனால் தான் நல்ல கதைகளையும் நல்ல சினிமாக்களையும் அதிகம் காண முடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே, மலையாளம் கற்று வந்ததாகவும் தற்போது மலையாள சினிமாவில் நல்ல நடிகராக வளர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் .

ஜாக்கோப்பின்டே சொர்கராஜியம் படத்தில் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் கௌதம் மேனன் தான் நடிக்க வேண்டியது இருந்தது அந்த சமயத்தில் ஏற்பட்ட மோசமான பருவநிலை காரணமாக கௌதம் மேனனால் துபாய்க்கு நடிக்க வர முடியவில்லை அதனால் துபாயில் இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று பகிர்ந்து இருக்கிறார் .
இவரின் குரல் கம்பீரமாக கனீர் என்று இருக்கும் இவர் துருவங்கள் பதினாறு படத்தில் நடிக்கும் போதும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கும் போதும் ரசிகர்கள் இவரின் குரலை வெகுவாக ரசித்திருந்தனர். மேலும் இந்த குரல் தான் என் மிக பெரிய பலம் என்று கூறியுள்ளார் அஸ்வின் குமார். இந்த குரலை வைத்து மலையாளத்தில் பல வில்லன்களுக்கு டப் செய்து வருவதாக கூறினார். மேலும் தமிழ் பையன் என்பதால் பல நடிகர்களுக்கு தமிழுக்கு டப் செய்யவும் என் குரல் நன்றாக பயன் படுகிறது என்று கூறியுள்ளார்.
தற்போது தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி என அஸ்வின் குமார் நடித்து வருகிறார் .எப்போதும் தன்னை ஒரு மொழி நடிகராக பார்த்தில்லை நான் ஒட்டுமொத்த இந்திய நடிகராக தான் ஆசை பட்டிருக்கிறேன் அதனால் எந்த மொழியில் நல்ல கதை நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறதோ அதை ஏற்று நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்