Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெரியம்மா நக்மா!
Click here for more images |
குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக தாய் வீடான மும்பைக்குச் சென்றுள்ளார் ஜோதிகா. கணவர் சூர்யா, வாரணம் ஆயிரம் பட ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயுள்ளதால் குழந்தை தியாவுடன் மும்பைக்கு அம்மா வீட்டுக்குப் போயுள்ளார் ஜோதிகா.
ஜோதிகா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊர் வந்திருப்பதால் அக்கா நக்மா தனது ஷூட்டிங்குகளை ரத்து செய்து விட்டு ஜோதிகாவையும், அவரது குழந்தையையும் பார்த்துக் கொண்டு வீட்டோடு இருக்கிறாராம்.
தியாவுக்காக ஏகப்பட்ட பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் வீடு முழுக்க வாங்கிப் போட்டு நிரப்பி விட்டாராம் நக்மா. தியாவுடன் சேர்ந்து அவரும் ஒரு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
தியாவைப் பார்த்து நக்மா சந்தோஷமடைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது தியா என்ற பெயரை பரிந்துரைத்தவரே நக்மாதானாம்.
இதுகுறித்து நக்மா கூறுகையில், பெயர் தேர்வு செய்தபோது சிவக்குமார் சார் தாராளமாக நடந்து கொண்டார். தியா என்ற பெயரை அவரும், அவரது குடும்பத்தினரும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டனர். எங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளாள் தியா என்று பெருமை பொங்கக் கூறினார்.
பாசமான பெரியம்மாதான்!