ஜாய் கிரிஸில்டா தயாரிப்பாளருடன் தொடர்பில் இருந்தாரா? பிரச்சனைக்கு காரணம் இதுதான்..பயில்வான் பேட்டி!
சென்னை: புகழ்பெற்ற சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சோஷியல் மீடியால் இது பேசுபொருளாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து Frontvoods TV யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.
அதில்,மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். ஜாய் கிரிஸில்டா மூலமாக எனக்கு குழந்தை வாரிசு வேண்டாம். மனைவியாக வேண்டுமானால் இரு, ஆனால், குழந்தை வேண்டாம் என்கிறார். அது மட்டுமல்லாமல், ஜாய் கிரிஸில்டா வயிற்றில் வளர்வது என்னுடைய குழந்தையே இல்லை என்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு என்று மனைவி, இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவருடைய மனைவி ஸ்ருதி பிரியா,ஆளும் கட்சியில் பேச்சாளராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வழக்கறிஞராகவும் இருக்கிறார். இதனால், சட்ட பிரச்சனை வந்துவிடும் என்பது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு: ஜாய் கிரிஸில்டா பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக்கை காதலித்து 2018 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த குழந்தையின் பள்ளி கட்டணத்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் கட்டி வந்தார். மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, ஜாய் கிரிஸில்டா மூன்று பேருடன் உறவில் இருந்திருக்கிறார். அதேபோல, ஜிவி பிரகாஷுடன் ஜாய் கிரிஸில்டா நெருங்கி பழகியதாகவும், இருவரும் உறவில் இருந்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தெரியும்: இது மட்டுமில்லாமல், இரண்டு தயாரிப்பாளருடன் ஜாய் கிரிஸில்டா தொடர்பில் இருந்தார். அவர்களுடன், பெங்களூர் மற்றும் வெளிநாட்டிற்கும் சென்றுள்ளார். எப்படி மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா வெளிநாட்டிற்கு அழைத்து சென்றாரோ அதே போல, தயாரிப்பாளர்களும் அழைத்து சென்று இருக்கிறார்கள். இப்போது மாதம்பட்டி மீது ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினால், நான்கு பேரில் நானும் ஒருவன் என ஈசியாக சொல்லிவிட்டு சென்று விடுவார். ஜாய் கிரிஸில்டா இதற்கு முன்பே இரண்டு முறை கருவை கலைத்து இருக்கிறார். ஆனால், இந்த முறை மாதம்பட்டியை மாட்டிவிட வேண்டும் என்பதற்காக மீண்டும் கர்ப்பம் அடைந்து இருக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தான் அது யாருடைய குழந்தை என்பது தெரியும். சினிமாவில் இது எல்லாம் சாதாரணமான விஷயம், பல முன்னணி நடிகர்கள் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். மனைவி வேறு வழியே இல்லாமல் விட்டுகொடுத்து விடுகிறார்கள் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். பயில்வான் ரங்கநாதனின் பேச்சை கேட்ட பலர், பெண் பாவம் சும்மாவிடாது என்றும், நீ எல்லாம் திருந்தவே மாட்டியா என கேட்டு வருகின்றனர்.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா விஜய்யின் ஜில்லா, ரவி மோகனின் மிருதன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இது வரை இந்த பிரச்சனை குறித்து, வாய் திறக்காமல் சைலண்டாகவே இருந்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.


Click it and Unblock the Notifications











