twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் விலகியதால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறினாரா வனிதா... அவரே சொன்ன விளக்கம்

    |

    சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வனிதா விஜயக்குமார் பாதியிலேயே வெளியேறினார். இதற்கு என்ன காரணம் என பல விதமாக தகவல்கள் பரவி வரும் நிலையில், தான் வெளியேறியதற்கு என்ன காரணம், எதனால் அந்த முடிவை எடுத்தேன் என வனிதா விஜயக்குமாரே பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

    அனிருத் 2-2ன்னு போட்டா.. யுவன் 3-3ன்னு போட்டு இருக்காரே.. கையில் லாலிபாப்புடன் என்ன சொல்ல போறாரோ?அனிருத் 2-2ன்னு போட்டா.. யுவன் 3-3ன்னு போட்டு இருக்காரே.. கையில் லாலிபாப்புடன் என்ன சொல்ல போறாரோ?

    பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பரபரப்பை கிளப்பி வந்த வனிதா விஜயக்குமார், ஃபைனல்ஸ் வரை போவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாவது வாரத்திலேயே தானே பிக்பாசிடம் சென்று, தான் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் வனிதா விஜயக்குமார். முதலில் சமாதானம் செய்த பிக்பாஸ், பிறகு ஓகே சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டார். வெளியே வந்த பிறகு வனிதா அளித்த பேட்டி விபரம் இதோ.

     நன்றிக்கடனுக்காக பிக்பாஸ் போனேன்

    நன்றிக்கடனுக்காக பிக்பாஸ் போனேன்

    வனிதா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் எனக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் கிடைத்தார்கள். பிக்பாஸ் என்பது என் வாழ்க்கையில் முடிந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் என்று ஒரு நிகழ்ச்சியை நடந்தி, அதில் நான் வர வேண்டும் என அவர்கள் தான் தேர்வு செய்து அழைத்தார்கள். ஆனால் தற்போது நான் பல படங்களில் நடித்து வருவதால் அது முடியுமா என யோசித்தேன். ஆனால் அதையும் தாண்டி சேனலுக்கு நன்றிக்கடன் என ஒன்று இருப்பதால் அவர்கள் கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை.

    டாஸ்க்குகளால் தான் பிரச்சனை

    டாஸ்க்குகளால் தான் பிரச்சனை

    விட்டதை பிடிக்கிறது என்பது டயலாக்கிற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் நான் எதையும் விடவும் இல்லை. பிடிக்கவும் போகவில்லை. என்டர்டைன்மென்டிற்காக மட்டும் யாரும் ஷோ பார்க்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து டாஸ்குகளும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அதோடு விதிகளும் தெளிவாக இல்லை. நான் பிக்பாஸ் கூட தான் சண்டை போட்டேன். மேக் அப் சாதனங்கள் பற்றிய அருமை அவர்களுக்கு தெரியவில்லை. இப்போது தான் சிலர் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். பாலாவும் கூட அவனுக்கு வந்ததால் தான் புரிந்து கொண்டுள்ளான்.

    இதெல்லாம் தான் காரணமா

    இதெல்லாம் தான் காரணமா

    எப்பவும் ஒரு விஷயம் மட்டும் ஒரு முடிவிற்கு காரணமாக இருக்காது. என்னுடைய மேக் அப் செட்களை எடுத்து உடைத்தது எனக்கு எரிச்சலடைய வைத்தது. தொழிலுக்கு அது தேவையானது என எடுத்துச் செல்வதை வேண்டுமென்றே இதை எடுத்தால் கோபப்படுவார்கள் என்பது அவர்களின் கேம். ஆரம்பத்தில் இருந்தே எரிச்சலடைய வைத்த ஒரு நபர் நிரூப். பாலா என்னுடைய மேக் அப் செட்களை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆனால் ஜுலி என்னுடைய காஸ்ட்லி பெர்ஃயூமை எடுத்து டாய்லெட்டில் போட்டாள். நிரூப் நிறைய பொருட்களை உடைத்து சேதப்படுத்தினான். அதுவும் குழந்தை டாஸ்க்கின் போது ஓவராக செய்தான். ஆனால் வெளியே வந்ததற்கு இது காரணம் கிடையாது. ஒன்றன் பின் ஒன்றாக பல விஷயங்களால் தான் இந்த முடிவை எடுத்தேன்.

     இவரால் தான் வெளியேறும் முடிவா

    இவரால் தான் வெளியேறும் முடிவா

    நான், சினேகன் எல்லோரும் கமல் சாரை நம்பி தான் சென்றோம். இந்த ஷோவிற்காக என்னை அழைத்து பேசிய போது, நான் கேட்ட முதல் கேள்வி, யார் ஹோஸ்ட் என்பது தான். நம்மை கேள்வி கேட்பவருக்கு தகுதி வேணும். யார் கேள்வி கேட்கிறார் என்பது மிகவும் முக்கியம். கமல் சார் போன்ற ஒரு லெஜன்ட்ரி நடிகர் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லலாம். அவர் கோபமாக கேட்டால் கூட, திட்டினால் கூட உரிமையாக பேச முடியும். புதிதாக யாராவது வந்து என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.

    கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு

    கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு

    உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்னை கேள்வி கேட்பதற்கு என்ற காரணத்தால் தான் பிபி ஜோடிகளில் இருந்து நான் வெளியேறினேன். இது எல்லாமே மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும், இனியும் இந்த ஷோவில் தொடர்வது நன்றாக இருக்காது என நினைத்தேன். ஏதாவது விபரீதம் நடந்தால் மட்டும் தான் ஒருவர் ஷோவில் போக வேண்டும் என்றால், நான் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை என்று தான் பிக்பாசிடமும் கூறினேன். இந்த ஷோவிற்காக நான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது தான் எனக்கே தெரிந்தது, உடலில் ஹீமோகுளோபின் மிகவும் குறைவாக உள்ளதென. ரத்தம் ஏற்ற கூடிய நிலை உள்ளது என அவங்க டாக்டர் தான் கூறினார். எனது உடல்நிலையையும் கருத்தில் கொண்டு தான் இந்த போல்டான முடிவை எடுத்தேன்.

    எனக்கு சண்டை போடவே பிடிக்காது

    எனக்கு சண்டை போடவே பிடிக்காது

    போல்டான முடிவு என்பதை நான் எனது கல்யாணத்திலேயே எடுத்தேன். நிறைய பேருக்கு தெரியாத விஷயம், எனக்கு சண்டை போடவே பிடிக்காது. லைஃப்ல நான் யாரையும் அடித்ததே இல்லை. சும்மா சேனல்களில் பில்ட் அப் அப்படி கொடுத்திருக்காங்க. எனக்கு வாக்குவாதம் செய்வதே பிடிக்காது. சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் தான் சண்டை போடுகிறேன். சண்டை போட்டா தான் காரியம் நடக்கும் என்பதற்காக சண்டை போடுகிறோம். எல்லாவற்றையும் சகித்து கொண்டு இருக்க வேண்டும் என்றால் அடி உடை வாங்கிக் கொண்டு ஒரே கல்யாணம் பண்ணிகிட்டு, அப்படியே இருந்திருப்பேன்.

    நான் என்ன அன்னை தெரசாவா

    நான் என்ன அன்னை தெரசாவா

    நிறைய விஷயங்களை என்னால் எதிர்கொள்ள முடியாததால் தான் பிக்பாசிடம் கேட்டு விட்டு, வெளியே வந்தேன். சுயநலமில்லாமல் இருப்பதற்கு நான் அன்னை தெரசா கிடையாது. அப்படி இருந்தால் கொல்கத்தாவில் சேரிட்டி டிரஸ்ட் வைத்து கோடீஸ்வரியாக இருந்திருப்பேன். நான் சாதாரணமாக வாடகை வீட்டில் இருந்து, அதை கட்டுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இது சுயநலமான முடிவு என்று கூட எடுத்துக் கொள்ளுங்கள்.

    ரம்யாகிருஷ்ணனை பார்த்து பயமா

    ரம்யாகிருஷ்ணனை பார்த்து பயமா

    இந்த ஷோவுக்கு ரம்யா கிருஷ்ணன் வர மாட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும். இருவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ள சேனலும் விரும்பாது. எனக்கு யாரை பார்த்தும் பயமில்லை. ரம்யாவும் என்னை பார்த்து பயப்படுகிறார் என சொல்லவில்லை. ஏற்கனவே எதிர்பாராமல் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விட்டதால், மறுபடியும் அதை தொடர யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படியே நடந்திருந்தாலும் டிஆர்பி.,க்காக வேண்டுமானால் ரம்யா கிருஷ்ணன் முன்னாடியே நான் ஷோவிலிருந்து வெளியேறி இருப்பேன். எனது முடிவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    சிம்புவிற்காக பைத்தியமாக முடியாது

    சிம்புவிற்காக பைத்தியமாக முடியாது

    சிம்புவை எனக்கு பிடிக்கும். சிம்புவிற்கும் என்னை பிடிக்கும். அவர் நேர்மையானவர். என்னை போலவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு டைப் தான். ஹோஸ்ட் எனக்கு பிரச்சனை என்றால், சிம்பு தான் வர போகிறார் என என்னிடம் சொல்லி இருப்பார்கள். ஆனால் அது என் மனதை மாற்றாது என அவர்களுக்கு தெரியும். சிம்பு வார இறுதியில் ஹோஸ்டாக வருகிறார் என்பதற்காக அந்த வாரம் முழுவதும் நான் பைத்தியமாக உட்கார முடியாது. சிம்பு வருவதால் புதிய ஸ்கிரிப்ட்டுடன் வேறு விதமாக ஷோவை கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அதை திரும்பப் போய் நான் கெடுக்க விரும்பவில்லை.

    நான் சாதாரண போட்டியாளர் கிடையாது

    நான் சாதாரண போட்டியாளர் கிடையாது

    எனக்கு பிடிக்கவில்லை என்றால் நோ சொல்லுவேன். பிபி ஜோடிகள், பிபி அல்டிமேட்டில் இருந்து நான் வெளியேறியதை என்னுடைய ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியும். என்னுடன் சண்டை போட்டால் தான் ஃபேமஸ் ஆக முடியும் என பாலா, ஜுலி ஆகியோர் சொன்னார்கள். நேற்று கூட ப்ரோமோவில் அனிதா சொல்கிறார், வனிதாவும் நம்மை போல் சாதாரண போட்டியாளர் என்று. நான் சாதாரண போட்டியாளர் கிடையாது. நான் ஸ்டார் போட்டியாளர். எல்லோரும் போட்டியாளர்கள் தான் எல்லோருடைய சம்பளமும் ஒன்றாகவா உள்ளது. ஏற்கனவே கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் வர தயங்குவதற்கு காரணம், மீண்டும் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதால் தான்.

    பாய்ஃபிரண்ட் கூட போட்டோ போட்டா தப்பா

    பாய்ஃபிரண்ட் கூட போட்டோ போட்டா தப்பா

    ஓவியாவும் பரபரப்பாக பேசப்பட்ட பிரபலமான போட்டியாளர் தான். ஆனால் அவர் தன்னுடைய பாய்ஃபிரண்ட் உடன் போட்டோ போட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் நான் யாருடனாவது இருக்கும் போட்டோவை போட்டால் உடனடியாக இது தான் வனிதாவின் புதிய காதலரா, இவரை திருமணம் செய்து கொள்ள போகிறாரா என எழுதி விடுகிறார்கள். மக்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வதில்லை ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை தான் இது காட்டுகிறது.

    ஆமாம் சொன்னேன்...அதுக்கென்ன

    ஆமாம் சொன்னேன்...அதுக்கென்ன

    ஜுலி பைத்தியம் மாதிரி நடந்து கொண்டதால் தான் நான் பைத்தியம் என்றேன். ஒரு பொருளுடைய மதிப்பு தெரியாததால் வேறு வார்த்தை சொல்ல விரும்பாததால் தான் நிரூப்பை பிச்சைக்காரன் என்றேன். ஆமாம் சொன்னேன். அதுக்கென்ன இப்போ. பலர் கமணெ்டில் எழுதுவதை விட நான் பேசியது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. தாமரையை ஃபிராடு என்று சொன்னது கூட எல்லோரும் சாதாரணமாக சொல்லக் கூடியது தான். இதை பெரிதாக எடுத்துக் கொண்டு ரியாக்ட் செய்தார் அவர். கடைசியில் பல்லை உடைக்கும் அளவிற்கு கோபம் வந்தது. அதனால் தான் அப்படி சொன்னேன். நமக்கு பிடிக்காத விஷயங்களை கடந்து போறது தான் போல்டான முடிவு. அதைத் தாங்கிக் கொண்டிருப்பது போல்ட் கிடையாது. அதைத் தான் நான் செய்தேன் என்றார் வனிதா.

    English summary
    After walking out of Bigg Boss Ultimate, Vanitha Vijayakumar openly talks about what happened inside Bigg Boss's house. She shared the real reason behind her walkout decision. She also said Ramya Krishnan was not a reason for her decision.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X