Don't Miss!
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்
சென்னை: என்னால் விஜய்யை சக நடிகராக எப்பொழுதுமே பார்க்க முடியாது கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நாக் அஷ்வின் இயக்கியுள்ள படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார்.
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
மேக்கப்
மகாநதி படத்தில் நடிக்கத் துவங்கியபோது மேக்கப் போட மட்டும் மூன்றரை மணிநேரம் ஆகும். அதன் பிறகு அத்தனை மணிநேரமாக மேக்கப் போடுவது எனக்கு பெரிதாக தெரியவில்லை.
பயம்
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. அதே சமயம் அவ்வளவு பெரிய நடிகையை போன்று நடிப்பதில் பயமும் இருந்தது. இந்த படத்தில் நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது.
மகள்
சாவித்ரியின் மகளிடம் பேசினேன். அவர் தனது தாயின் மேனரிசம் உள்ளிட்டவை பற்றி என்னிடம் கூறினார். எனக்கும் சாவித்ரிக்கும் இடையே நிறைய ஒற்றுமை இருப்பதை புரிந்து கொண்டேன்.
கிரிக்கெட்
சாவித்ரி நீச்சலடிப்பாராம். எனக்கும் நீச்சல் என்றால் ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் டீ பிரியர்கள். அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். நானும் பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவருக்கு கார் ஓட்ட பிடிக்குமாம், எனக்கும் தான். இப்படி எனக்கும் அவருக்கும் இடையே நிறைய ஒற்றுமை உள்ளது.
ரசிகை
மீண்டும் விஜய் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவரை சக நடிகராக என்னால் எப்பொழுதுமே பார்க்க முடியாது. எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகை தருணங்கள் என்றே கருதுவேன் என்றார் கீர்த்தி சுரேஷ்.