Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
திரை விருந்துக்கு தயாராகுங்கள்: கமல்
"மும்பை எக்ஸ்பிரஸ் வெளியாகும் நாளில் "சந்திரமுகியும் வெளியாவது தற்செயலானது. எனது மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இருபடங்களும் நல்ல விருந்தாக அமையும். அதை அனுபவிக்க ரசிகர்கள் தயாராகுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது பட ரிலீஸ் குறித்து கமல் கூறுகையில், ரஜினியின் படமும், எனது படமும் ஒரே நாளில் வெளியாவதுதற்செயலானது. இருவருமே, இதுவரை மோதிக் கொண்டதில்லை.
எங்களுக்குள் எந்தவித கசப்புணர்வுகளும் ஏற்பட்டதில்லை. நாங்கள் மட்டுமல்ல, எங்களது ரசிகர்களும் மோதிக் கொள்ளாமல்மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இருந்து வருகிறோம்.
இருவரது ரசிகர்களுக்கும் வருகிற தமிழ்ப் புத்தாண்டு நல்ல விருந்தைக் கொடுக்கவுள்ளது. அதை அனுபவிக்க அவர்கள் தயாராகவேண்டும்.
எனது படம் நல்ல நகைச்சுவைப் படம். வழக்கமாக ரஜினியின் படத்தில் அவர் தான் பலம். கதை இரண்டாம் பட்சமாகத் தான்இருக்கும். ஆனால் "சந்திரமுகியில் கதையும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.
அனைத்து வசதிகளும் நிறைந்த மும்பை மாநகரத்தில், எந்தவித வசதியையுமே அனுபவிக்காமல், அதுகுறித்து கொஞ்சம் கூடத்தெரியாமல் வாழும் மக்களைப் பற்றிய கதைதான் "மும்பை எக்ஸ்பிரஸ். கொஞ்சம் நையாண்டியாக அதைக் கொடுத்துள்ளோம்.
இந்தப் படத்தில் நான் இதுவரை செய்யாத பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதாவது மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிப்பிழைப்பவராக நான் நடித்துள்ளேன். பல காட்சிகளை நானேதான் செய்துள்ளேன். டூப் போடவில்லை.
"வசூல் ராஜா னு பேர் வெச்சேன். இதுக்கு டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கோவிச்சுக்கிட்டாங்க.. "திருடா னு கூப்பிட்டா இவங்கஎதுக்கு திரும்பிப் பார்க்கிறாங்கன்னு தெரியல. வசூல் பண்ற டாக்டரே நம்மூரில் இல்லைன்னு உங்களால சொல்லமுடியுமா ?
சாதாரண ஜனங்களிடம் போய் கேட்டுப்பாருங்க..எது உண்மைன்னு தெரியும். அந்த கலாட்டா முடிஞ்சுது. இப்போ அடுத்தது!"மும்பை எக்ஸ்பிரஸ் னு பேர் வெச்சேன். அது ஆங்கிலத் தலைப்புன்னு மாத்தச் சொல்றாங்க.
நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்க விரும்புகிறேன். "குருதிப்புனல்" னு பேர் வெச்சப்போ என்னை யாரும் பாராட்டவில்லை.
இப்போ இந்தப்படத்தில் கதை மும்பையைச் சுற்றி நடக்குது. என் பேரே படத்தில் அது தான். அதுக்காக நிறைய செலவுசெய்தாகிவிட்டது. திடீர்னு பேரை மாத்தச் சொன்னா எப்படி என்றார் கமல்.
நியாயந்தானே!