twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருப்திகர இல்லறம் - குஷ்பு

    By Staff
    |

    

    Click here for more images
    நடிகையாக வலம் வந்த நான் இப்போது இல்லற வாழ்க்கையையும் ரசித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என குஷ்பு கூறியுள்ளார்.

    தமிழ் கூறும் நல்லுலகை கொஞ்ச காலத்திற்கு முன்பு அதிர்ச்சி அடைய வைத்தவர் குஷ்பு. அவருக்கு கோவில் கட்டி சில ரசிகர்கள் கும்பாபிஷேகம் செய்ததால் உலகத் தமிழர்கள் எல்லாம் கலங்கிப் போனார்கள். இப்படியெல்லாம் கூட ரசிகர்கள் இருப்பார்களா என்று அதிசயித்துப் போனார்கள்.

    கற்பு குறித்து குஷ்பு கருத்து கூறப் போக, சமீபத்தில் அந்தக் கோவிலை ரசிகர்கள் இடித்துத் தள்ளி விட்டது வேறு கதை.

    கதாநாயகியாகவும், பின்னர் அக்கா, தங்கை, அம்மா என பலவேடங்களில் நடித்து, தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பை பிழிந்து பல குடும்பப் பெண்களை 'அழ' வைத்துக் கொண்டிருப்பவர் குஷ்பு!

    தற்போது ஜெயா டிவியில் நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியை விட குஷ்பு போடும் 'ஜாக்கெட்'தான் படு பிரபலம். ஒற்றை ஜன்னல், இரட்டை ஜன்னல், மேலடுக்கு, கீழடுக்கு என விதம் விதமான டிசைன் ஜாக்கெட்களை அணிந்து வந்து நிற்கும் குஷ்புவின் ஜாக்கெட் அழகைப் பார்க்கத்தான் பெண்கள் டிவி பெட்டி முன்பு அலை மோதுகிறார்கள்.

    சின்னத்திரை வெற்றியைத் தொடர்ந்து சினிமாவிலும் தயாரிப்பாளராக வெற்றி பெற்றார் குஷ்பு. ஒரே நேரத்தில் நடிப்பு, தயாரிப்பு, கேம் ஷோ என கலக்கினாலும், இல்லத்தரசியாக இருப்பதுதான் குஷ்புவுக்கு ரொம்பப் பிடித்துள்ளதாம்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வீட்டை பராமரிப்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் கஷ்டமான வேலை. குடும்பத்தை கவனிப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது உட்பட அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்வது பெண்களுக்கு சவாலாக இருக்கிறது.

    ஆனால் இந்த சவாலான வேலைகளை நான் அனுபவித்து செய்கிறேன்.

    டிவி தொடர்களில் நடித்தாலும், கேம் ஷோ செய்தாலும் அனைத்தையும் நான் முழு மகிழ்ச்சியுடன் செய்வதால் தான் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடம் சென்றடைகிறது. இப்போது சின்ன குழந்தைகள் கூட என்னை பார்த்தால் ஜாக்பாட் ஆண்ட்டி (ஜாக்கெட் ஆண்ட்டி என்று கூப்பிடாமல் விட்டார்களே) என்று சொல்கிறார்கள்.

    டைரக்டரை திருமணம் செய்த நான் எப்போதும் அவருடைய வேலைகளில் தலையிடுவது கிடையாது. ஆனால் அவருக்கு துணையாக நான் எப்போதும் இருக்கிறேன்.

    எனக்கு போன் செய்து சிலர், உங்கள் கணவருக்கு இன்று எங்கே ஷூட்டிங் என்று கேட்டால் கொஞ்சம் இருங்கள் பார்த்து சொல்கிறேன் என்று சொல்வேன். அந்தளவிற்கு அவருடைய வேலைகளில் தேவையில்லாமல் நான் தலையிடுவது கிடையாது என்றார் குஷ்பு.

    பேரரசு இயக்கத்தில் பழனி என்ற படத்தில் பரத்தின் அக்காவாக நடித்து வரும் குஷ்பு அடுத்த வருடம் மோகன்லால் படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்போது கலைஞரின் தாய் காவியம் படத்திலும் குஷ்பு அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

    Read more about: happy house kushboo wife
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X