Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தற்கொலை செய்திருப்பேன்-மோனிகா
வழக்கில் சிக்கி சிறையில் இருந்த காலம் இருண்டது. இந்த கால கட்டத்தில் எனது குடும்பத்தினர் மட்டும் ஆதரவாக இல்லாமல் இருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன் என்று நடிகை மோனிகா பேடி கூறியுள்ளார்.
தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான அபு சலீமின் காதலி மோனிகா பேடி. நடித்துக் கொண்டிருந்த இவர் சலீமின் காதலியான பின்னர் நடிப்பை விட்டு விட்டு அவருடன் நாட்டை விட்டுத் தப்பி தலைமறைவாகி விட்டார்.சலீமும், பேடியும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களை சிபிஐ இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.
மோனிகா பேடி மீது போபால் நீதிமன்றத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து நேற்று மோனிகா பேடி விடுதலை செய்யப்பட்டார்.
பெரும் நிம்மதியுடன் காணப்பட்ட மோனிகா பேடி, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறையில் இருந்தகாலம் இருண்ட காலம். ஆனால் அங்குள்ள பெண் கைதிகளுக்கு நான் நடனம், யோகாசனம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தேன்.
எனது குடும்பத்தினர், குறிப்பாக எனது பெற்றோர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். அது மட்டும் கிடைத்திருக்காவிட்டால், நிச்சயம் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.
இனிமேல் நடிப்புதான் எனது வாழ்க்கை. மீண்டும் நடிப்பேன். ஆனால் உடனடியாக நடிப்பேன் என்று கூற முடியாது. சில படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. கண்டிப்பாக மறுபடியும் நான் நடிப்பேன் என்றார் மோனிகா பேடி.