கரு முட்டையை ஃப்ரீஸ் செய்து வைக்கணும்னு நினைச்சேன்.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் பேட்டி!
சென்னை: சீதா ராமம் படம் வெளியானதில் இருந்து யாருடா அந்த சீதா மகாலக்ஷ்மி என நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே ஏகப்பட்ட இளம் ரசிகர்கள் வண்டு போல வட்டமிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் சீதா ராமம் வெளியான நிலையில், அவரது ஒவ்வொரு போட்டோவையும் எடுத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வர்ணித்து வருகின்றனர்.
இப்படி ரசிகர்களை சமீப காலமாக பித்துப் பிடிக்க வைத்துள்ள மிருணாள் தாகூர் குழந்தையை பெற்றுக் கொள்வது பற்றி அளித்த பேட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

30 வயசு
மராத்தி நடிகையான மிருணாள் தாகூருக்கு 30 வயதாகிறது. மராத்தி டிவி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த அவர், 2014ம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சீதா ராமம் தான் அவரது முதல் டோலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதா மகாலக்ஷ்மி
துல்கர் சல்மானின் சீதா ராமம் படத்தில் சீதா மகாலக்ஷ்மியாக நடித்த மிருணாள் தாகூரின் போட்டோக்களை தங்களது மொபைல் வால் பேப்பராக மாற்றிக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு ஸ்க்ரீன் பிரெசன்ஸில் ரசிகர்களை ஒரே படத்தின் மூலம் கட்டிப் போட்டு விட்டார்.

அழகோவியம்
அழகுன்னா அழகு அப்படியொரு அழகுன்னு ரசிகர்கள் மதன் கார்கியை விட அதிக வார்த்தைகளை போட்டு வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிய தனது கருத்தை தெரிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் நெஞ்சத்திலும் இடியை இறக்கி இருக்கிறார் மிருணாள் தாகூர்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை
30 வயதை கடந்துள்ள மிருணாள் தாகூர் இன்னமும் சிங்கிளாகத்தான் உள்ளார். ஆனால், தனது அம்மா தன்னை வளர்க்கும் போதே, அவருக்கும் சீக்கிரமே குழந்தையை பெற்றுக் கொண்டு அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கரு முட்டை
மேலும், தனது கரு முட்டையை ஃப்ரீஸ் செய்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு குழந்தை பிறந்தால் கூட அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் நினைத்ததையும் மனம் திறந்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

கைவசம்
பிப்பா, பூஜா மெரி ஜான் உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், ஆங் மிச்சோலி, கும்ரா உள்ளிட்ட படங்களும் உருவாகி வருகின்றன. சீதா ராமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகளும் இவருக்கு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











