நடிகைகள் நாய் வளர்ப்பதே அதற்காகத்தான்.. வெளியில் சொன்னா அசிங்கம்.. பிரபலம் பேட்டி!
சென்னை: டெல்லியில் தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்தது. தெருக்களில் நாய் கடிக்கு ஆளாகி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உயிரிழப்பது கவலை தெரிவித்த நீதிபதிகள், டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இதுகுறித்து நடிகை சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 3 லட்சம் உயிர்களின் நிலைமை என்ன? இதற்கு நாடே வெட்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து, Kingwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் நந்தவனம் நந்தகுமார், அதில் அப்பன், ஆத்தா செத்தா கூட யாரும் இந்த அளவுக்கு அழ மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு நாய்க்காக சதா உருகி உருகி அழுது தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து இருக்கிறார். நாய் வளர்ப்புவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இவர்கள் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து விடுகிறார்கள் அதை வீட்டுக்குள்ளே வைத்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் வெளியில் சென்றால் காரு, இறங்கினால் காரு அப்படி இருக்கும்போது சாதாரண மக்களின் வலி என்ன என்பது அவர்களுக்கு எப்படி தெரியும், ஒரு முறை நாயிடம் கடிவாங்கினால், இப்படி அழுது கொண்டு வீடியோ போடுவாரா.

நாய்க்கு சோறு வைத்தால் நல்லது: சில பணக்காரர்கள் நாய்க்கு சோறு வைத்தால் நாம் நன்றாக இருப்போம் என நினைத்துக் கொண்டு நாய்களுக்கு இரவில் தேடி தேடி சென்று சோறு வைக்கிறார்கள். அதுவும் ரேஷன் கடை அரிசியை வாங்க வேண்டும் என்பதற்காக அதை வாங்கி நாய்க்கு தருகிறார்கள். கறிக்கடையில் கழிவுவான கறிகளை வாங்கி அதையும் நாய்களுக்கு உணவாக வைக்கிறார்கள். நாய் நன்றி உள்ளது என்பதால் இவர்கள் தெருவில் போனால் நாய் கடிக்காது, ஆனால், மற்றவர்கள் உணவு கொடுக்காமல் தெருவில் செல்லும்போது இரவு நேரங்களில் அவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது.
வெளியில் சொன்னால் அசிங்கம்: வீட்டு செல்லப் பிராணியாக நாயை வளர்ப்பவர்களின் தேவை வேறொன்றாக இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் அசிங்கம் அதை வெளியில் சொல்ல முடியாது. குறிப்பாக நடிகைகள் நாயை வளர்ப்பதே அதற்கு தான். திருமணமும் செய்து கொள்ள மாட்டார்கள், திருமணமானாலும் கணவனை விரட்டி விட்டு விடுவார்கள். அவர்கள் வளர் நாயை வளர்ப்பதற்கு ஒரு தேவை இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. நாய் இருந்தால் போதும் என்ற மனதை திருப்தியுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பீலிங்க்ஸை அவர்கள் அங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கொண்டு வந்து எங்களிடம் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு சொல்லக்கூடாது. அவர்கள் போல தினமும் காரில் சென்று கொண்டு சொகுசான வாழ்க்கை நாங்கள் வாழ வில்லை, தினமும் தெருவில் நடந்து சென்று கொண்டு இருக்கிறோம். சதா போன்றவர்கள் கதறி அழுதுவிட்டு சென்றுவிடுவார்கள், கடிவாங்குவது யார்... இருந்தாலும் சதா, படங்களில் நடித்ததை விட, நாய்க்காக அழுது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்பு வரும் என்று அந்த பேட்டியில் நந்தவனம் நந்தகுமார் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











