Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன் சொல்வதை கேளுங்க!
காதலிக்கும் முன்பே தெளிவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என் கதைதான் என்று புலம்பலாகப் பேசுகிறரார் நயனதாரா.
ஐயா நாயகி இப்போது அய்யோப் பாவமாக இருக்கிறார். சென்னைப் பக்கம் வரவே பயப்படுகிறார். தனுஷுடன் இப்போது நடிக்கப் போகும் படத்தின் பெரும் பகுதியை நயனதாரா விருப்பத்தின்படி ஆந்திராவில் வைத்துக் கொள்ளப் போகிறார்களாம்.எப்போது வேண்டுமானாலும் வம்பு வரலாம், வம்பு செய்யலாம் என பயப்படுகிறாராம் நயனதாரா.
அத்தோடு தனது நிலை குறித்தும் நெருங்கியவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம். கிட்டத்தட்ட தாடி வைக்காத சித்தி (சித்தரின் பெண் பால்) போல பேசுகிறாராம் நயன்ஸ்.
சம்பாதிப்பதற்கு வாய்ப்பு உள்ள காலகட்டத்தில் காதலில் விழவே கூடாது. அப்படி விழுந்தால் அது நம் தலையில் நாமே மண் அள்ளிப் போடுவதற்கு சமானம்.
அப்படியே காதலிக்க முடிவெடுத்தாலும், காதலிக்கும் நபரைப் பற்றி தெளிவாக, முழுமையாக தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அப்புறம்தான் காதலிக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், கண்டோம், காதலிப்போம் என்று அதிரடியாக, அவசர கதியாக, காதலிக்க ஆரம்பித்தால் பிறகு என் கதை போல ஆகி விடும். காதலில் விழுந்தால் என் கதை போல ஆகிவிடும்.
என்னைப் பொருத்தவரை ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால் காதலைப் பற்றி கனவில் கூட நினைக்கக் கூடாது. அதுதான் புத்திசாலித்தனம், பாதுகாப்பு என்று புலம்புகிறாராம் நயனதாரா.
புலம்ப விட்டுட்டியே பொன்னப்பா!