ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 24ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
கெட்டிமேளம்: தியாவை தேடி சென்ற வெற்றியும் திரும்பி வராத நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம். கேசவன் மற்றும் ரகுவரன் ஆகியோர் அஞ்சலி தாலியை கழட்டி மகேஷ் முகத்தில் வீசி எறிந்ததையும், துளசி, தியா மற்றும் வெற்றியை தொலைத்துவிட்ட நிற்பதை பற்றி சொல்லி நக்கலாக பேசிக் கொள்கின்றனர். மறுபக்கம் ரவுடிகள் வெற்றியை அடித்து ஒரு பைக்குக்குள் வைத்து ஆற்றுக்குள் தூக்கி வீச செல்கின்றனர். வீட்டில் துளசி, வெற்றி தியாவுடன் தான் வருவான் என காத்திருந்து ஏமாற்றம் அடைகிறாள். இந்த சமயத்தில் தூரத்தில் வெற்றி வருவது போல தெரிய அதை பார்த்து துளசி சந்தோஷம் அடைகிறாள். வெற்றி வந்துட்டாரு என்று சொல்ல குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று கூடி விடுகின்றனர். வெற்றி போலீசில் சீக்கிரம் கடத்தியது யார் என்பதை விசாரிக்க சொல்கிறான். இதனால் மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள்.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வெற்றி உனக்கென்ன ஆச்சு என்று கேட்க பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது. பைக்குள் அடைக்கப்பட்ட வெற்றி தொடர்ந்து சிரித்தபடியே இருக்க ரவுடிகள் கடுப்பாகி மூட்டையை அவிழ்த்து உன்னை கொல்லப் போகிறோம் என்று சொல்கின்றனர். நீ எங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்ட என்று சொல்ல மாட்டிக்கிட்டது நான் இல்ல நீங்க தான்டா என்று வெற்றி அவர்களிடம் சண்டை இடுகிறான். பிறகு அங்கிருந்து அவர்களிடமிருந்து தப்பிய வெற்றி வீட்டுக்கு வருவது தெரிய வருகிறது. துளசி தியா எங்கே என்று கேட்க வெற்றி தியா என்று கூப்பிட தூரத்திலிருந்து தியா ஓடி வந்து வெற்றியை பிடித்துக் கொள்கிறாள். தியாவை பார்த்த துளசியின் நிம்மதி அடைகிறாள்.




Click it and Unblock the Notifications











