Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோலிவுட் பற்றி இப்படி சொல்லிட்டாரே ஓவியா: அப்போ, இனி அவ்ளோ தானா?
சென்னை: தமிழ் திரையுலகம் பற்றி ஓவியா கூறியுள்ளது பலருக்கும் பிடிக்கவில்லை.
கோலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பிறகும் அவரின் கெரியர் பிக்கப் ஆகவில்லை. இந்நிலையில் அவர் பிளாக் காபி என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா, வாழ்க்கை பற்றி ஓவியா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
பிளாக் காபி
மலையாள திரையுலகில் என்னை யாருக்கும் தெரியாததால் நான் புதுமுகம் போன்று உணர்கிறேன். நான் மலையாள படத்தில் நடிக்க திட்டமிடவில்லை. ஆனால் இயக்குநர் பாபுராஜை எனக்கு பல காலமாக தெரியும், அவர் வலியுறுத்தியதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
மல்லுவுட்
தமிழ் திரையுலகை போன்று இல்லாமல் மலையாள திரையுலகில் அனைவரும் நட்புடன் பழகுகிறார்கள், மேலும் நம்மை ஒரு நடிகையாக அல்ல மாறாக குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். மலையாள திரையுலகில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்க்கிறோம். ஆனால் தமிழில் மாலை 6 மணிக்கு பேக்கப் செய்துவிடுவார்கள். கோலிவுட்டில் வேலை முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். ஆனால் இங்கு உடனே கிளம்பாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுகிறார்கள். மேலும் தமிழை போன்று இல்லாமல் இங்கு ஷாட் முடிந்ததும் யாரும் கேரவனுக்குள் செல்வது இல்லை.
படப்பிடிப்பு
பிளாக் காபி படத்தில் நடிப்பது ஜாலியாக உள்ளது. என் தோழியின் வீட்டில் ஷூட்டிங் நடந்தது. அது வேலை போன்று இல்லாமல் தோழியின் வீட்டில் ரிலாக்ஸ் செய்தது போன்று இருந்தது. பிளாக் காபி படத்தின் இயக்குநர் பாபுராஜ் திறமையானவர். இந்த படத்திற்கு என் சொந்த குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறேன். தாய்மொழியில் பேசுவது பெரும் திருப்தி அளிக்கும்.
பாசம்
கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் பாசம் வைத்துள்ளனர். ஸ்டார்களுக்காக ரசிகர்கள் எதையும் செய்வார்கள். நான் நடிகையானது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நான் கேரளாவில் செட்டில் ஆக விரும்புகிறேன். நான் என்னை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நான் சென்னையில் வசிப்பதால் கேரளாவில் உள்ள என் நண்பர்கள், உணவு ஆகியவற்றை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!