Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சந்திப்போமா?
செல்லமே படம் ரீமா சென்னை தூக்கோ தூக்கு என்று தூக்கி நிறுத்தியுள்ளது. ஒபனிங் சீனிலேயே ஓபனாகநடித்தவர், அதையே படம் முழுக்க கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
படத்தில் எத்தனை சீன்களில் ரீமா அரைகுறையாக வந்தார் என்பதை விட, எத்தனை சீன்களில் முழுக்கஉடையணிந்து வந்தார் என்பதைக் கண்டிபிடிப்பது எளிது. ரீமாவின் இந்த கவர்ச்சி கதகளியாட்டத்தோடுகொஞ்சம் வித்தியாசமான கதையும் சேர்ந்து கொண்டதால் படம் ஹிட்டாகிவிட்டது.
ஆனால், எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள். இருந்தாலும் இப்போது கோடம்பாக்கத்தில் திரும்பியபக்கமெல்லாம் ரீமா புராணம் தான் ஓடுகிறது. அதோடு ரீசண்டாக வெளிவந்துள்ள கிரி படமும் சேர்ந்து கொள்ள,எல்லா சுவரிலும் ரீமாவின் போஸ்டர்தான் தெரிகிறது.
இதனால் அடுத்தடுத்து படவாய்ப்புகளும் வந்துள்ளன. இந்த திடீர் வாழ்வு காரணமாக தலை எது வால் எது என்றுபுரியாத அளவுக்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார் ரீமா. இதுவரை ஹோட்டல்களில்தங்கியிருந்தவர் இப்போது பங்களா தேடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் தனது கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்ள ஒரு மேனேஜரையும் நியமித்துள்ளார். பயங்கரகுஷியில் இருக்கும் ரீமாவைச் சந்தித்து எடக்கு முடக்காக சில கேள்விகளை வீசிய போது அநாயசமாக அவற்றைஎதிர்கொண்டார்.
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள், ஜேஜே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது ஏன் என்றுகேட்டபோது, தயாரிப்பாளரும் இயக்குனரும் நட்பு ரீதியில் கேட்டதாலும், அதிக சம்பளம் கொடுத்ததாலும்நடித்தேன் என்றார்.
கவர்ச்சி காட்டாமல் உங்களால் நடிக்க முடியாதா என்ற கேள்விக்கு, கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை.கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. ஆபாசமாக நடிப்பதுதான் தவறு என அரைத்த மாவை அரைத்தார்.
மும்பை நடிகைகள் சிலர் முக்கால் நிர்வாணமாக நடிக்கிறார்கள். சிகரெட் பிடிக்கிறார்கள். குடிக்கிறார்கள். நீங்கஎப்படி கேட்டபோது,
மும்பை நடிகைகள் நாகரீகத்தில் முற்றியவர்கள். ஆனா, சத்தியமாக எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதுசாமி என்றார் சத்தியம் செய்யாத குறையாக.
கேட்டுகங்கப்பா !