Don't Miss!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்னேகாவின் கனவு! கேப் விட்டு கேப் விட்டு பல வதந்திகள் பறந்தோடி வந்து படுத்திக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் ஸ்னேகா படு ஜாலியாகத்தான் இருக்கிறார்.முதலில் ஸ்ரீகாந்த்துடன் காதல் என வந்த செய்திகள், அது ஓய்ந்த பின்னர் நாக்ரவியால் வந்த தொல்லைகள் எனஸ்னேகா பட்ட பாடுகள் கொஞ்சம் ஜாஸ்திதான்.எல்லாம் ஓய்ந்த பிறகு இப்போது ஒரு தொழிலதிபருடன் பலமாகவேகிசுகிசுக்கப்பட்டு வருகிறார் ஸ்னேகா.ஆனால் இந்த வதந்திகள் ஸ்னேகாவை தனிப்பட்ட முறையில் பாதித்தாலும் கூடவெளிப்படையாக அவற்றைக் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியாகத்தான்இருக்கிறார்.நான் தப்பு செய்தால்தோன விசனப்பட முடியும், கவலைப்பட வேண்டும்,வெட்கப்பட முடியும். எதையுமே நான் செய்யவில்லை. எனவே வழக்கம் போலஜாலியாக இருக்கிறேன், கவலையே இல்லாமல் இருக்கிறேன் என்கிறார்.ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களுமே மனதளவில் என்னை பாதிக்கவேசெய்தது. ஆனாலும் என்ன செய்வது, இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால்,ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் நடிக்க முடியுமா, இல்லை சிரிக்கத்தான்முடியுமா என்கிறார் பற்கள் பளிச்சிட.ஸ்னேகா இப்போது தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்கொடுக்கிறாராம். ஏன் தமிழ் வெறுத்து விட்டதா என்று கேட்டபோது,அப்படியெல்லாம் இல்லை, நான் தமிழச்சி என்பதால் தமிழ் சினிமாவில் எனக்குநிரந்தரமான இடம் கிடைக்காமல் இருக்கலாம் என்று குசும்பாக பதில் சொல்கிறார்.பொத்தாம் பொதுவாக கேட்டால் இப்படித்தான் கமல்தனமாக பேசிக்கொண்டிருப்பார் என்பதால் டிராக்கை மாற்றினோம்.உங்களோட முகத்திலேயே கண்கள்தான் அதிக சுறுசுறுப்பாக, பளபளப்பாக, படுவெளிச்சமாக உள்ளது. அதன் அழகு ரகசியம் என்னவோ?அதுக்கு காரணம் வெள்ளரிக்காய்தான். சொல்லி விட்டு சில்லுன்னு சிரித்தார் ஸ்னேகா.வெள்ளரிக்காய் ஒத்தடம் கொடுத்தால் கண்கள் படு பளிச்சென இருக்கும்,பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். இதுதான் அதன் ரகசியம்.நான் என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள்.அதற்கு எனது அக்காதான் காரணம். அவர்தான் எனது காஸ்ட்யூம் டிசைனர்.எனக்கு எப்போதெல்லாம் மனசு சரியில்லையோ, கவலையாக இருக்கிறதோ,அப்போது எனக்கு பெரிய ஆறுதலாக இருப்பவன் எனது அக்காவின் மகன். அந்தகுட்டிப் பையனைக் கொஞ்சிக் கொண்டிருந்தால் மனசு அப்படியே லேசாகி விடும்என்றார்.இவ்வளவு அழகான கண்கள் வைத்திருக்கிறீர்களே.. அதில் ஏதாவது அழகான கனவைஒளித்து வைத்திருகிறீர்களா என்று கேட்டால்,என் பெரிய கனவு என்ன தெரியுமா? சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும்என்பதுதான். அது நடக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் புன்னகைஇளவரசி ஸ்னேகா.நாங்களும் தான் நம்புறோம்...
முதலில் ஸ்ரீகாந்த்துடன் காதல் என வந்த செய்திகள், அது ஓய்ந்த பின்னர் நாக்ரவியால் வந்த தொல்லைகள் எனஸ்னேகா பட்ட பாடுகள் கொஞ்சம் ஜாஸ்திதான்.எல்லாம் ஓய்ந்த பிறகு இப்போது ஒரு தொழிலதிபருடன் பலமாகவேகிசுகிசுக்கப்பட்டு வருகிறார் ஸ்னேகா.
ஆனால் இந்த வதந்திகள் ஸ்னேகாவை தனிப்பட்ட முறையில் பாதித்தாலும் கூடவெளிப்படையாக அவற்றைக் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியாகத்தான்இருக்கிறார்.
நான் தப்பு செய்தால்தோன விசனப்பட முடியும், கவலைப்பட வேண்டும்,வெட்கப்பட முடியும். எதையுமே நான் செய்யவில்லை. எனவே வழக்கம் போலஜாலியாக இருக்கிறேன், கவலையே இல்லாமல் இருக்கிறேன் என்கிறார்.
ஸ்னேகா இப்போது தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்கொடுக்கிறாராம். ஏன் தமிழ் வெறுத்து விட்டதா என்று கேட்டபோது,அப்படியெல்லாம் இல்லை, நான் தமிழச்சி என்பதால் தமிழ் சினிமாவில் எனக்குநிரந்தரமான இடம் கிடைக்காமல் இருக்கலாம் என்று குசும்பாக பதில் சொல்கிறார்.
உங்களோட முகத்திலேயே கண்கள்தான் அதிக சுறுசுறுப்பாக, பளபளப்பாக, படுவெளிச்சமாக உள்ளது. அதன் அழகு ரகசியம் என்னவோ?
நான் என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள்.அதற்கு எனது அக்காதான் காரணம். அவர்தான் எனது காஸ்ட்யூம் டிசைனர்.
இவ்வளவு அழகான கண்கள் வைத்திருக்கிறீர்களே.. அதில் ஏதாவது அழகான கனவைஒளித்து வைத்திருகிறீர்களா என்று கேட்டால்,
என் பெரிய கனவு என்ன தெரியுமா? சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும்என்பதுதான். அது நடக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் புன்னகைஇளவரசி ஸ்னேகா.
நாங்களும் தான் நம்புறோம்...
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!