ஸ்னேகாவின் கனவு! கேப் விட்டு கேப் விட்டு பல வதந்திகள் பறந்தோடி வந்து படுத்திக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் ஸ்னேகா படு ஜாலியாகத்தான் இருக்கிறார்.முதலில் ஸ்ரீகாந்த்துடன் காதல் என வந்த செய்திகள், அது ஓய்ந்த பின்னர் நாக்ரவியால் வந்த தொல்லைகள் எனஸ்னேகா பட்ட பாடுகள் கொஞ்சம் ஜாஸ்திதான்.எல்லாம் ஓய்ந்த பிறகு இப்போது ஒரு தொழிலதிபருடன் பலமாகவேகிசுகிசுக்கப்பட்டு வருகிறார் ஸ்னேகா.ஆனால் இந்த வதந்திகள் ஸ்னேகாவை தனிப்பட்ட முறையில் பாதித்தாலும் கூடவெளிப்படையாக அவற்றைக் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியாகத்தான்இருக்கிறார்.நான் தப்பு செய்தால்தோன விசனப்பட முடியும், கவலைப்பட வேண்டும்,வெட்கப்பட முடியும். எதையுமே நான் செய்யவில்லை. எனவே வழக்கம் போலஜாலியாக இருக்கிறேன், கவலையே இல்லாமல் இருக்கிறேன் என்கிறார்.ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களுமே மனதளவில் என்னை பாதிக்கவேசெய்தது. ஆனாலும் என்ன செய்வது, இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால்,ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் நடிக்க முடியுமா, இல்லை சிரிக்கத்தான்முடியுமா என்கிறார் பற்கள் பளிச்சிட.ஸ்னேகா இப்போது தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்கொடுக்கிறாராம். ஏன் தமிழ் வெறுத்து விட்டதா என்று கேட்டபோது,அப்படியெல்லாம் இல்லை, நான் தமிழச்சி என்பதால் தமிழ் சினிமாவில் எனக்குநிரந்தரமான இடம் கிடைக்காமல் இருக்கலாம் என்று குசும்பாக பதில் சொல்கிறார்.பொத்தாம் பொதுவாக கேட்டால் இப்படித்தான் கமல்தனமாக பேசிக்கொண்டிருப்பார் என்பதால் டிராக்கை மாற்றினோம்.உங்களோட முகத்திலேயே கண்கள்தான் அதிக சுறுசுறுப்பாக, பளபளப்பாக, படுவெளிச்சமாக உள்ளது. அதன் அழகு ரகசியம் என்னவோ?அதுக்கு காரணம் வெள்ளரிக்காய்தான். சொல்லி விட்டு சில்லுன்னு சிரித்தார் ஸ்னேகா.வெள்ளரிக்காய் ஒத்தடம் கொடுத்தால் கண்கள் படு பளிச்சென இருக்கும்,பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். இதுதான் அதன் ரகசியம்.நான் என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள்.அதற்கு எனது அக்காதான் காரணம். அவர்தான் எனது காஸ்ட்யூம் டிசைனர்.எனக்கு எப்போதெல்லாம் மனசு சரியில்லையோ, கவலையாக இருக்கிறதோ,அப்போது எனக்கு பெரிய ஆறுதலாக இருப்பவன் எனது அக்காவின் மகன். அந்தகுட்டிப் பையனைக் கொஞ்சிக் கொண்டிருந்தால் மனசு அப்படியே லேசாகி விடும்என்றார்.இவ்வளவு அழகான கண்கள் வைத்திருக்கிறீர்களே.. அதில் ஏதாவது அழகான கனவைஒளித்து வைத்திருகிறீர்களா என்று கேட்டால்,என் பெரிய கனவு என்ன தெரியுமா? சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும்என்பதுதான். அது நடக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் புன்னகைஇளவரசி ஸ்னேகா.நாங்களும் தான் நம்புறோம்...
முதலில் ஸ்ரீகாந்த்துடன் காதல் என வந்த செய்திகள், அது ஓய்ந்த பின்னர் நாக்ரவியால் வந்த தொல்லைகள் எனஸ்னேகா பட்ட பாடுகள் கொஞ்சம் ஜாஸ்திதான்.எல்லாம் ஓய்ந்த பிறகு இப்போது ஒரு தொழிலதிபருடன் பலமாகவேகிசுகிசுக்கப்பட்டு வருகிறார் ஸ்னேகா.
ஆனால் இந்த வதந்திகள் ஸ்னேகாவை தனிப்பட்ட முறையில் பாதித்தாலும் கூடவெளிப்படையாக அவற்றைக் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியாகத்தான்இருக்கிறார்.
நான் தப்பு செய்தால்தோன விசனப்பட முடியும், கவலைப்பட வேண்டும்,வெட்கப்பட முடியும். எதையுமே நான் செய்யவில்லை. எனவே வழக்கம் போலஜாலியாக இருக்கிறேன், கவலையே இல்லாமல் இருக்கிறேன் என்கிறார்.
ஸ்னேகா இப்போது தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்கொடுக்கிறாராம். ஏன் தமிழ் வெறுத்து விட்டதா என்று கேட்டபோது,அப்படியெல்லாம் இல்லை, நான் தமிழச்சி என்பதால் தமிழ் சினிமாவில் எனக்குநிரந்தரமான இடம் கிடைக்காமல் இருக்கலாம் என்று குசும்பாக பதில் சொல்கிறார்.
உங்களோட முகத்திலேயே கண்கள்தான் அதிக சுறுசுறுப்பாக, பளபளப்பாக, படுவெளிச்சமாக உள்ளது. அதன் அழகு ரகசியம் என்னவோ?
நான் என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள்.அதற்கு எனது அக்காதான் காரணம். அவர்தான் எனது காஸ்ட்யூம் டிசைனர்.
இவ்வளவு அழகான கண்கள் வைத்திருக்கிறீர்களே.. அதில் ஏதாவது அழகான கனவைஒளித்து வைத்திருகிறீர்களா என்று கேட்டால்,
என் பெரிய கனவு என்ன தெரியுமா? சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும்என்பதுதான். அது நடக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் புன்னகைஇளவரசி ஸ்னேகா.
நாங்களும் தான் நம்புறோம்...


Click it and Unblock the Notifications











