Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஊத்திக்கிட்ட "சுக்ரன்"!
இதை சந்திரசேகரே ஒப்புக் கொண்டார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சமூக நோக்குடன் கூடிய கதையை வைத்துத்தான் சுக்ரன் படத்தை இயக்கினேன். படம் நல்ல படம்தான். ஆனால் இது தோல்விப்படம். பெரிய ஹிட் ஆகவில்லை.
சுக்ரனை தீபாவளிக்கே வெளியிட நினைத்தோம். ஆனால் முடியவில்லை. நாட்டில் நடப்பவற்றைத்தான் சுக்ரனில் காட்டினோம்.அதில் கற்பனை எதையும் கலக்கவில்லை. நீதிபதி ஒருவர் செய்யும் அட்டூழியம் குறித்த காட்சியை மிகவும் துணிச்சலாகஎடுத்தேன்.
அழுத்தமான கதையை இப்போது யாரும் பார்ப்பதில்லை, வரவேற்பதில்லை. அடிதடி, பாட்டு, பொழுதுபோக்குடன் கூடியபடங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
கோவையில் சில தியேட்டர்ளில் சுக்ரன் படத்தை பார்க்க வந்த 18 வயதுக்கு குறைந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.இது ஏன் என்பது புரியவில்லை. போலீஸ் அணுகுமுறை எனக்குக் கோபத்தைத் தரவில்லை (!!).
படத்தில் நடித்த புதுமுக நடிகர் (ரவி கிருஷ்ணா) மீது கோபம் வர வாய்ப்பில்லை, விஜய் எல்லோருக்கும் பிடித்தவர், அவர் மீதும்கோபம் வர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் 112 தியேட்டர்களில் இப்படம் ஓடுகிறது. ஆனால் கோவையில் உள்ள ஒரே ஒருதியேட்டல்தான் இப்படி நடந்துள்ளது.
விஜய்க்கு அரசியல் ஆர்வம் இல்லை. அவர் அரசியலுக்கு வருவாரா என்று எல்லோரும் கேட்கிறார்கள். எனக்கு அரசியல்தெரியும். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால்தான் அரசியலுக்கு வரவில்லை. நானே வராதபோது, விஜய் நிச்சயம்வரவே மாட்டார்.
சினிமாவில் போட்டி அதிகமாகி வருகிறது. இதனால் எல்லா படத்தையும் ஒரு வெறியோடு அவர் செய்து வருகிறார். புதிதாகவரும் அனைத்து இளம் நடிகர்களையும் தனக்குப் போட்டியாக நினைத்து கடுமையாக உழைக்கிறார். சின்ன நடிகர்தானே என்றுநினைத்து யாரையும் அவர் குறைத்து மதிப்படுவதில்லை.
25 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவரிடம்நல்ல தலைமைத்துவப் பண்பு உள்ளது. நல்லவர், சமூக அக்கறை கொண்டவர். அவரது அப்பா ஒரு காங்கிரஸ்வாதி. எதைச்செய்தாலும் தைரியமாக செய்வார். ஒரு கட்சி ஆரம்பித்தால் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி அவரிடம் உள்ளது.
தமிழைக் கேவலப்படுத்த வேண்டும் என்று எந்த கலைஞனும், இயக்குனரும் நினைப்பதில்லை. சினிமாக்காரர்களுக்குத்தான்தமிழ் மீது அதிகம் பற்று உள்ளது. எனவே சினிமாக்காரர்களை சுதந்திரமாக படம் எடுக்க அரசியல்வாதிகள் விட வேண்டும்என்றார் சந்திரசேகர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!