லோகேஷ் கனகரார்ஜ் அந்த விஷயத்துல செம ஸ்ட்ராங்.. ஓபனாக பேசிய விவேக் பிரசன்னா!
சினிமா உலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்ல முடியாது. நடிகர் விவேக் பிரசன்னா, ஒருமுறை ரத்னகுமார் தயாரிப்பில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவரை, வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டும் என்று ரத்னகுமார் கூறியதாக நினைவு கூர்ந்தார். அந்த ஆச்சரியமான தருணத்தை அவரே பகிர்ந்துகொள்கிறார்.
விவேக் பிரசன்னா சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைய ஆசைப்பட்டவர். ஆனால், நண்பர்கள் ரத்னகுமார், விஜய் கார்த்திக் கண்ணன் போன்றவர்களுடன் இணைந்து குறும்படங்கள் செய்தபோது, நடிப்பு மீது ஆர்வம் வந்து நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக 'மது' என்ற குறும்படம் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது.

விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னாவின் நடிப்புத் திறமையை அடையாளம் கண்டு வாய்ப்பு கொடுக்கச் சொன்னாராம். அதனைத் தொடர்ந்து, 'சேதுபதி' திரைப்படத்தில் நடித்த பிறகு, சினிமா வாழ்க்கை மாறியதாக விவேக் கூறுகிறார். அந்த வாய்ப்பை இயக்குனர் அருண் கொடுத்தார் என்றும் நன்றியுடன் குறிப்பிட்டார்.
'விக்ரம் வேதா' திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை விவேக் பிரசன்னா பகிர்ந்துகொண்டார். புஷ்கர்-காயத்ரி இருவரையும் சிறந்த எழுத்தாளர்கள் என்றும் மனிதர்கள் என்றும் புகழ்ந்தார். அவர்கள் சென்னையை அழகாக திரையில் காட்டுவதாகவும், அந்த நகரத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுகையில், அவர் தனது வேலையைச் சரியாகச் செய்கிறார் என்றும், தொழில்நுட்ப ரீதியாக அவர் மிகவும் திறமையானவர் என்றும் விவேக் குறிப்பிட்டார். மாநகரம் திரைப்படத்தில் நடித்தபோது, லோகேஷ் தனக்கு வாய்ப்பளித்தது ஒரு நல்ல தருணமாக இருந்தது என்றும் கூறினார்.
சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானதில் தனக்கு வருத்தம் இருப்பதாக விவேக் பிரசன்னா கூறினார். அந்தப் படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அது வானத்தைப் பற்றிய படம் என்பதாலேயே வருத்தம் அதிகம் எனவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











