Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாலு பட ரிலீசுக்கு அப்படி என்னதான் உதவி செய்தார் விஜய்?- டி ராஜேந்தர் பேட்டி
வாலு படம் வெளியாக நடிகர் விஜய் பெரும் உதவி செய்ததாக மீடியா எழுதி வந்தது. அதை சிம்புவும் உறுதி செய்து, விஜய் என் கூடப் பிறக்காத சகோதரர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்படி என்னதான் உதவினார் விஜய்?
இன்று நடந்த பிரஸ் மீட்டில் டி ராஜேந்தர் சொன்னது இது:
சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், சிம்பு படத்துக்கு பிரச்சினை என்று வந்தபிறகு யாரும் உதவ முன்வரவில்லை. விஜய் தானாக முன்வந்து இப்படம் வெளிவருவதற்கு மிகவும் உதவியாக இருந்தார்.
அதேபோல், அவரது மேனேஜரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் மற்றும் கோவை விநியோகஸ்தர் சிவக்குமார் ஆகியோர் இந்தப் படம் ரலீசாக துணை நின்றனர்.
விஜய் எனக்குப் பண உதவி செய்ததாக சிலர் கூறுகின்றனர். நிச்சயம் அப்படியெல்லாம் நான் யாரிடமும் இனாம் வாங்கவில்லை. அப்படி வாங்கக் கூடியவன் அல்ல நான் என்பது இந்த திரையுலகத்துக்கு நன்கு தெரியும்.
விஜய்யும், புலி படத் தயாரிப்பாளரும், கோவை சிவகுமாரும் வாலு படம் வெளியாக சில விநியோகஸ்தர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தனர்," என்றார்.
விஜய் ‘வேலாயுதம்' படத்தில் எனக்கு டி.டி.ஆர் எல்லாம் தெரியாது. டி.ஆர். மட்டும்தான் தெரியும். நான் அவரோட தீவிர ரசிகர் என்று சொல்வார். உண்மையில் நான்தான் அவருடைய தீவிர ரசிகன். அவருக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். விஜய் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர்தான் உண்மையான தமிழன்," என்று கூறினார்.