Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்.டி.ஆர். அதட்டியதால் பயந்துவிட்டேன்: பி. வாசு
நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது சகோதரர் மனோவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கும் படம் வருவான் தலைவன். சேகர் ராஜா இயக்கும் இந்த படத்தில் தீக்ஷா சேத் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா தமிழுக்கு வருகிறார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட இயக்குனர் பி. வாசு பேசியதாவது,
தெலுங்கில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுப்பதற்காக அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் கதை சொல்லச் சென்றேன். எனக்கு ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் கதை சொல்ல வராது அதனால் தமிழிலேயே சொல்கிறேன் என்றேன்.
உடனே அவர், ஆந்திர முதல்வரிடம் வந்து தமிழில் கதை சொல்கிறேன் என்று சொல்ல என்ன தைரியம் உனக்கு என்றார். அதைக் கேட்டு நான் பயந்துவிட்டேன். ஆனால் அவரோ, நான் 40 ஆண்டுகள் தமிழ்நாட்டு தண்ணீர் குடித்து வளர்ந்தவன். எனக்கும் தமிழ் தெரியும். தமிழிலேயே கதையைச் சொல் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
மேலும் அடுத்த முறை வரும்போது தெலுங்கில் கதை சொல்ல வேண்டும் என்றார்.
ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், மம்மூட்டி ஆகிய 4 மொழி நடிகர்களும் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் தான். அவர்களின் பிள்ளைகளும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அதனால் தான் அவர்களை எளிதில் அணுக முடிகிறது. அவர்களிடம் தமிழில் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி நம் தமிழ் இயக்குனர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற முடிகிறது என்றார்.