Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 11 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
உக்ரமாகும் கொரோனா.. செத்துமடியும் மக்கள்.. அமெரிக்கா, பிரேசில் இங்கிலாந்து, ஜெர்மனியில் ஷாக்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காமராஜர் தோற்றதைப் பார்த்த பின் அரசியல் ஆசையே போயிடுச்சி! - பாரதிராஜா

மதுரையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.கோவிந்தராஜன் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, விழாவில் பேசுகையில், "எனது தாத்தா, எங்கப்பா எல்லாருமே பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் குடும்பந்தான் எங்களோடதும்.
எனக்கு அந்தக் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அப்பா அம்மா, சகோதரர்களுக்கிடையேய முரண்பாடு வருவதில்லையா... அப்படித்தான் இதுவும். கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதல் வருவது சகஜம்.
நான் தீவிர காங்கிரஸ் கட்சிகாரனாக கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1962 வரை இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில் ஏறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.
பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது எனது வீட்டில் 3 நாட்கள் எங்க வீட்ல சமைக்கலை. காமராஜர் தோல்விக்காக எனது தந்தை அந்த அளவு வருத்தப்பட்டார். நானும் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவு எடுக்க வைத்தது. அவரையே தோற்கடித்து விட்டார்களே என்ற ஆதங்கம் இன்னிக்கு வரைக்கும் என் மனசுல இருக்கு.
தாய் வீடு, மொழி, இனம் காணாமல்போக அனுமதிக்கக் கூடாது. அவை காணாமல்போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும். ஆகவே மக்கள் மொழிக்கு எதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் முதலில் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும். அது உங்க கடமை.
தமிழன் எல்லாவற்றையும் இழக்கக் கூடாது. எதிர்ப்பு சக்தியை காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறவும் முடியாது. அந்த எதிர்ப்பு சக்தியை காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்," என்றார் பாரதிராஜா.