Don't Miss!
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Sports சிக்சர் மன்னன் சிவம் துபே சாதனை.. 27 பந்தில் 66 ரன்கள் குவிப்பு.. 7 சிக்சர் விளாசி ரெக்கார்ட்
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காமராஜர் தோற்றதைப் பார்த்த பின் அரசியல் ஆசையே போயிடுச்சி! - பாரதிராஜா
மதுரையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.கோவிந்தராஜன் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, விழாவில் பேசுகையில், "எனது தாத்தா, எங்கப்பா எல்லாருமே பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் குடும்பந்தான் எங்களோடதும்.
எனக்கு அந்தக் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அப்பா அம்மா, சகோதரர்களுக்கிடையேய முரண்பாடு வருவதில்லையா... அப்படித்தான் இதுவும். கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதல் வருவது சகஜம்.
நான் தீவிர காங்கிரஸ் கட்சிகாரனாக கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1962 வரை இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில் ஏறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.
பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது எனது வீட்டில் 3 நாட்கள் எங்க வீட்ல சமைக்கலை. காமராஜர் தோல்விக்காக எனது தந்தை அந்த அளவு வருத்தப்பட்டார். நானும் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவு எடுக்க வைத்தது. அவரையே தோற்கடித்து விட்டார்களே என்ற ஆதங்கம் இன்னிக்கு வரைக்கும் என் மனசுல இருக்கு.
தாய் வீடு, மொழி, இனம் காணாமல்போக அனுமதிக்கக் கூடாது. அவை காணாமல்போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும். ஆகவே மக்கள் மொழிக்கு எதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் முதலில் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும். அது உங்க கடமை.
தமிழன் எல்லாவற்றையும் இழக்கக் கூடாது. எதிர்ப்பு சக்தியை காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறவும் முடியாது. அந்த எதிர்ப்பு சக்தியை காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்," என்றார் பாரதிராஜா.