Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுதந்திர தினத்திற்கு சமர்ப்பணமாக வரும் "தால் மிலாலே து" ஆல்பம்
சென்னை: இந்திய சுதந்திர தின சமர்ப்பணமாக "தால் மிலாலே து" என்ற வீடியோ ஆல்பம் சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது. தமிழரான குமார் நாராயணன் இசையமைத்து தனது சாய்ன் ட்யூன்ஸ் ஸ்டுடியோ (Saintunes Studio) சார்பில் இதைத் தயாரித்துள்ளார். இந்தியில் கபாலிக்கு பாடல் எழுதிய கவிஞர் உதய்குமார் "தால் மிலாலே து" என்கிற இப்பாடலை எழுதியுள்ளார்.
பாடல் என்ன சொல்கிறது?
நாங்கள் எங்கள் கௌரவம், சந்தோஷம், வாழ்வு எல்லாவற்றையும் தேசத்துக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கள் ஆசைகளை-விருப்பங்களைத் துறந்த சக்தியாக வந்து கொண்டிருக்கிறோம். இந்த மூவண்ணக்கொடி எங்கள் தைரியத்தைத் திறக்கிறது.
எங்களுக்குள் அணைந்த தீயையும் தகிக்க வைக்கிறது.
எங்களுக்குள் பெருமை சுடர்விடுகிறது.
நாட்டுக்காக ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து இணைவோம்; ஒன்று படுவோம்!
தேச முன்னேற்றத்துக்கான புதிய பாதை நோக்கி அணி வகுப்போம்!
புதிய பாதைகள் முடிவற்றற வாய்ப்புகளைத் திறந்து வைக்கும்.
நம் ஒற்றுமைச் சங்கிலி அறுபடாமல் காப்போம்.
தேசத்தின் தேவையான இளைஞர் சக்தி என்றும் இணைந்திருக்க வேண்டும்.!
நாம் நம் நம்பிக்கை, ஒற்றுமை, நல்லியல்புகளால் என்றும் இணைவோம்
வேறுபாடுகளை வேரறுத்துப் புதைப்போம்.
எங்கள் சுயமான அளப்பரிய சக்தியுடன் எங்கள் தேசக்கொடி பெருமையுடன் வானில் உயரே சிறகடித்துப் பறக்கிறது.
சமாதானம் ,சந்தோஷம் மற்றும் சுபிட்சத்தின் தூதுவனாக அது பறக்கிறது.
தேச முன்னேற்றத்துக்கான புதிய பாதை நோக்கி அணி வகுப்போம்....
இப்படிப் போகிறது அந்தப்பாடலின் சாராம்சம்! சுதந்திர தினத்துக்காக உருவாகியுள்ள இந்தப் பாடல் வீடியோ ஆல்பம், முழுக்க முழுக்க வணிக நோக்கமற்ற ஒரு முயற்சியாகும். இது தேசத்துக்கான சுதந்திரதின சமர்ப்பணம். இதைத் தேசப் பற்று கொண்ட யாரும் பாட, ஆட, பயன்படுத்த, காட்சிப்படுத்த, வெளியிட, பிரசுரிக்க, ஒளிபரப்ப முழு சுதந்திரம் கொடுத்துள்ளதுடன் எந்தக் காப்புரிமையுயும் இதில் குறுக்கே நிற்காது என்று இதை உருவாக்கியுள்ள சாய்ன் ட்யூன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பாடல்களை பாடியுள்ளவர்கள் குமார்நாராயணன், மனோ, பியுஷ், ஸ்ரீராம். "தால் மிலாலே து" என்கிற இப்பாடலை எழுதியுள்ளவர் உதய்குமார். இவர் இந்தி கபாலிக்கு பாடல் எழுதிய கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!