Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 100 நாட்கள் அமைதியாக போராட்டம் நடந்தது. 100வது நாள் போராட்டத்தின்போது போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 17 வயது பள்ளி மாணவி, 19 வயது கல்லூரி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்களை சுட்டுக் கொல்ல போலீசாருக்கு அனுமதி அளித்தது யார் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார். "என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம் தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம்
100 நாள் அங்க அமைதியாக நடந்தது ஆர்ப்பாட்டம் அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான் அப்பாவி மக்களை தான் சிட்டுக் குருவி போல் சுட்டுக் கொன்னுட்டான்' என்ற பாடல் கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளது.