Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோவையில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி.. நடத்துகிறார் கார்த்திக் ராஜா!
மதுரையைத் தொடர்ந்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கோவையிலும் நடத்துகிறார் அவர் மகன் கார்த்திக் ராஜா.
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார்.
மதுரையில்...
தனது அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு மதுரையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இளையராஜாவும் பங்கேற்றார். பல பாடல்களை அவர் பாடினார். மதுரை நகரமே ஸ்தம்பிக்கும் அளவு கூட்டம் கூடியது.
கோவையிலும்...
இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரிலும் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவெடுத்துள்ளார். இதனை கார்த்திக் ராஜாவே அறிவித்திருக்கிறார்.
வேண்டுகோள்
அவர் கூறுகையில், "மதுரையில் கடந்த வருடம் நடந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிறைய பேர் கோயமுத்தூரிலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். தற்போது இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்த இசை நிகழ்ச்சியில் நல்ல திறமையான பாடகர்களை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது," என்றார்.
இசையமைப்பிலும்...
தற்போது கார்த்திக் ராஜா இசையில், ‘கடை எண் 6', ‘வாராயோ வெண்ணிலவே', ‘சகாப்தம்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் சகாப்தம் படம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.