Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழ்ப் பட கதைகளை பிறமொழியில் திருடுகிறார்கள்! - கே எஸ் ரவிக்குமார் குற்றச்சாட்டு
அவர் பேசியது விளையாட வா படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.
கே.விஜயநந்தா இயக்கத்தில் விஸ்வநாத் பாலாஜி, திவ்யா பத்மினி ஜோடியாக நடிக்கும் படம் 'விளையாடவா'. கேரம் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கதை வருவது தமிழில் இதுவே முதல் முறை.
இந்தப் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்ட கே.எஸ்.ரவிக்குமார், பேசியதாவது:
கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லாத நிலைமை இப்போது உள்ளது. இப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கமலேஷ்குமார் என்னுடன் பத்து வருடங்களுக்கு மேல் திரைக்கதை விவாதத்தில் பங்கேற்றவர். நிறைய கதைகளும் எழுதி உள்ளார். ஆனாலும் இன்னும் அவர் திறமைகள் வெளிப்படாமல் உள்ளது.
கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும்.
அந்த கதையை தெலுங்கில் திருடி படம் எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில் வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வருவது போல் காட்சி இருந்தது. இது 'எதிரி' படத்தின் கதை.
இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர்," என்றார்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் குறிப்பிட இரண்டு படங்களுமே தனுஷ் நடித்தவை.
சமீபத்தில் வெளியான 'உத்தம புத்திரன்' படத்தில், மணமகளை மண்டபத்திலிருந்து கடத்தும் காட்சியும், பொல்லாதவன் படத்தில் பைக் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை தான் கே.எஸ்.ரவிக்குமார் திருட்டு கதை என்று பேசியதாக விழாவில் சலசலப்பு எழுந்தது.
விளையாடவா பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், முரளிதரன், டி.சிவா, திரிபுரசுந்தரி, நடிகர் பொன்வண்ணன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.