Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
சென்னை: வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. ஐக் இயக்கியுள்ள இந்த படத்தை அட்லீ தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசும்போது,
ஜீவா
ஜீவா என் முதலாளி. அவரின் அப்பா ஆர்.பி. சவுத்ரி சாரால் தான் ராதாரவி ஒரு நேரம் சாப்பிடுகிறான். ஸ்ரீதிவ்யா தேங்ஸ் மட்டுமே சொல்லிட்டு போச்சு.
சினிமா
எனக்கு பிறகு என் மகன் உள்ளான். அவனிடம் சினிமா என்றாலே 8 மைல் ஓடுகிறான். அய்யய்யே என்கிறான். அப்படி எல்லாம் சொல்லாதடா என்று கூறியுள்ளேன். சினிமாவில் நன்றி கெட்ட பயலுக நிறைய இருக்காங்கன்னு அவன் தெரிஞ்சுக்கிட்டான்.
சரவணா ஸ்டோர்ஸ்
வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று. சினிமா கெட்டுப் போச்சு என்ன செய்ய.
படம்
சங்கிலி புங்கிலி கதவை தொற படம் ஓஹோன்னு ஓடும் என்பதை தயாரிப்பாளரிடம் கூறிக் கொள்கிறேன். எங்கப்பா தமிழ்நாடு பூரா பரப்பியுள்ளார் குடும்பத்தை.
விஸ்வரூபம்
கமல் ஹாஸனை அழ வைத்த ஒரே படம் விஸ்வரூபம். அவர் டிவியில் அழுததை சொன்னேன். அதை சொல்றேன். நான் அந்த ஆள் அழுது பார்க்க முடியாது. நான் பால்ய சினேகிதன். நன்றி உள்ளவன் என்றார் ராதாரவி.