ருத்ரமாதேவி இசை வெளியீடு.. நாளை விசாகப்பட்டினத்தில்... நாளை மறுநாள் வராங்கலில்!

By Shankar

இளையராஜா இசையில் உருவாகியுள்ள பிரமாண்ட சரித்திரப் படமான ருத்ரமாதேவி இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் இரு நகரங்களில் நடக்கவிருக்கிறது.

குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள ருத்ரமாதேவி, தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தமிழ், தெலுங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டை இரு நகரங்களில் நடத்துகின்றனர். நாளை மார்ச் 21-ம் தேதி மாலை விசாகப்பட்டினத்திலும், நாளை மறுநாள் 22-ம் தேதி வராங்கல் நகரிலும் இசை வெளியீடு நடக்கிறது.

நாளை தெலுங்கு ஆண்டு பிறப்பாகும். இதைக் கொண்டாடும் வகையில் 3 பாடல்களை விசாகப்பட்டினத்தில் வெளியிடுகிறார்கள்.

அடுத்த மூன்று பாடல்களை வராங்கலில் வெளியிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அரசியல், திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இளையராஜாவும் பங்கேற்கவிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X