Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கண்ணீருடன் விடைப் பெற்றார் 'இசையரசி' எஸ் ஜானகி!
Recommended Video
மைசூரு: சினிமா, மேடைக் கச்சேரி அனைத்திலுமிருந்து ஓய்வு பெற்றதாக கண்ணீருடன் அறிவித்தார் இசையரசி எஸ் ஜானகி.
இந்திய சினிமாவில் மிக அதிகம் பாடிய பாடகிகளுள் ஒருவர் எஸ் ஜானகி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக
1952-ல் தொடங்கிய எஸ்.ஜானகியின் இசைப் பயணம் கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது. பல குரல் வித்தகியாகத் திகழ்ந்தார். இவருக்கு இணையான இன்னொரு குரலைச் சொல்வது கடினம். அப்படியொரு இனிய, பாவமிக்க குரலுக்குச் சொந்தக்காரர் ஜானகி.
பாடுவதை நிறுத்தினார்
சில ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேடைக் கச்சேரிகளையும் குறைத்துக் கொண்டார். டெலிவிஷன் ஷோக்களில் மட்டும் எப்போதாவது தோன்றுவார்.
ஓய்வு பெறுகிறேன்
80 வயதை கடந்த எஸ்.ஜானகி தனது முதுமை காரணமாகவும் இளையவர்களுக்கு வழி விடுவதற்காகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.
கடைசி கச்சேரி
இந்த நிலையில் மைசூரில் எஸ்.ஜானகியின் கச்சேரியை நடத்த தொழிலதிபர் மனுமேனன் ஏற்பாடு செய்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஜானகி ஒப்புக் கொண்ட கச்சேரியாம் இது.
இசைமழை
இதைதொடர்ந்து நேற்று மைசூருமான கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில் எஸ்.ஜானகியின் இசைக் கச்சேரி நடந்தது. சுமார் 4 மணிநேரம் இன்னிசை மழை பொழிந்தது. மிகவும் உணர்வுப்பூர்வமாக கண்ணீர் மல்க அவர் பாடல்களைப் பாடினார். சூரு ராஜ குடும்பத்தினர், கன்னட திரையுலக நடிகர், நடிகைகள் என்று பலரும் இதில் பங்கேற்றனர்.
இனி பாடமாட்டேன்
இறுதியில் கண்ணீருடன் விடை கொடுத்தார் எஸ் ஜானகி. இதுதான் தனது கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் பாடப் போவது இல்லை என்று கூறியபோது அவரது ரசிகர்களில் பலர் அழுதுவிட்டனர்.