Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'தமிழையும் தமிழனையும் கொச்சைப்படுத்தும் கொலைவெறி!'-நா.காமராசன்

ஆனால் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் தமிழ்க் கவிஞர்கள் இந்த கொலைவெறி பாடலைக் கண்டித்துப் பேசியிருந்ததைக் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பாரோ...
உடும்பன் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த மூத்த கவிஞர்களில் ஒருவரான, பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் பேசுகையில், " எனது தந்தை பாரதிதாசன், தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதித்தது இல்லை. இன்றைக்கு ஆங்கிலம், தமிழ் கலந்து பாட்டு எழுதுகிறார்கள். அதுபோன்ற பாடலை மக்கள் உங்களிடம் விண்ணப்பம் போட்டு கேட்டார்களா? மக்கள் இந்த பாடல்களை விரும்புகிறார்கள் என்பது அப்பட்டமான பொய். அறிந்தே நடக்கிறது இந்த கலாச்சார கொலை," என்றார்.
கவிஞர் அறிவுமதி பேசும்போது, "கொலை வெறிடி பாட்டு மெட்டில் பஞ்சாப் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் வந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலை வெறிடா என்ற பாடலை அதே மெட்டில் உருவாக்கி 'யூ' டியூப்பில் வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த பாடலை அதிலிருந்து அகற்றிவிட்டனர்" என்றார்.
தமிழையும், தமிழனையும் கொச்சைப்படுத்தும் பாடலாக கொலை வெறிடி பாடல் உள்ளது என்றார் கவிஞர் நா காமராசன் (ரஜினிக்காக சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு போன்ற அருமையான பாடல்களைத் தந்தவர்).
அப்துல் ரகுமான் பேசும்போது, 'நல்ல பாடல்கள் வந்த காலம் போய் “ஒய் திஸ் கொலை வெறி" பாடல் காலமாகி விட்டது' என்றார் வேதனையுடன்.