கையில் 15 படங்கள்… மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய யுவன்
சென்னை: இளையராஜாவின் வாரிசாக திரையுலகுக்கு நுழைந்தாலும் தன் தனித்துவ இசையால் புகழ்பெற்றார் யுவன் ஷங்கர் ராஜா.
யார் கண் பட்டதோ... குடும்ப பிர்சனைகளால் அவதிபட்ட அவர் சினிமாவில் கவனம் குறைக்க, வாய்ப்புகள் குறைந்தன. ஒரு கட்டத்தில் மீண்டு வருவாரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு காணாமல் போன யுவன் இப்போது மகள் பிறந்த பிறகு புதிய மனிதராக பிறப்பெடுத்து வந்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை வெளியான தர்மதுரை படத்தின் இசை மூலம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் யுவனுக்கு இது செகண்ட் இன்னிங்ஸ். மக்கா கலங்குதப்பா...
பாட்டு எக்குதப்பு ஹிட் ஆகியிருக்கிறது.
இதனால் சில காலமாக யுவனை ஒதுக்கி வைத்திருந்தவர்கள் மீண்டும் அவரை தேடி செல்ல யுவன் கையில் இப்போது 15 படங்களாம்.
அதிக சம்பளம் கேட்பதில்லை. பாடல்களுக்கு பின்னணி இசைக்கோ அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. இந்த இரண்டு தகுதிகள் போதாதா?


Click it and Unblock the Notifications











