Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எம்ஜிஆர் விழா... மூத்த நடிகைகள் பங்கேற்பு!
எம்ஜிஆரின் கலையுலக பவள விழா சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் அவருடன் பணியாற்றிய மூத்த நடிகைகள் பங்கேற்று விருதுகள் பெற்றனர்.
எம்.ஜி.ஆரின் 94-வது பிறந்த நாள் விழாவையும் அவரது கலையுலக பவள விழாவையும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ரசிகர்கள் கொண்டாடினர்.
அண்ணா சாலை நெடுக எம்.ஜி.ஆர். கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இவ்விழாவில் கூடினர்.
எம்.ஜி.ஆர் கட்அவுட்களுக்கு அவர்கள் மாலைகள் அணிவித்தனர். தீபாராதனை காட்டினர். அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூடி எம்ஜிஆரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
அரங்கில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் அபூர்வ படங்கள் அடங்கிய கண்காட்சி அனைவரையும் ஈர்த்தது. விழா மேடையில் பாலு அன்ட் பாலு இசைக்குழுவினர் எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களை பாடினர்.
சிறப்பு விருந்தினர்களாக, எம்ஜிஆருடன் நடித்த ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா, எம்.பானுமதி, எஸ்.எம். பானுமதி, திருடாதே லட்சுமி, கவிஞர் கண்ணதாசன் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், எம்.ஜி. சக்கரபாணி பேரன் எம்.ஜி.சி.பிரதீப், பி.எஸ். ராஜு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், புதுவை, மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.