Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல மலையாள இயக்குனர் மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் உத்தரவு
நிலமோசடி புகாரில் பிரபல மலையாள இயக்குநர் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த அனு ராதாரவி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ''போரூரில் எனக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதை மலையாள பட இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மூலம் ஏ.கே.மணி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நில மோசடி பற்றி 26-7-10 அன்று புறநகர் கமிஷனரிடம் புகார் அளித்தேன். அந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை.
எனவே எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க புறநகர் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி அக்பர்அலி, அனு ராதாரவியின் நில மோசடி புகாரில் உண்மை இருந்தால் மலையாள இயக்குனர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று புறநகர் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.