twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தரக்குறைவான புரொஜக்டர்கள்; ஏமாற்றப்படும் ரசிகர்கள் - 'ஒஸ்தி' தயாரிப்பாளர் ஆவேசம்

    By Shankar
    |

    படத்தை ஒஸ்தியா எடுத்து என்ன பிரயோஜனம்... தியேட்டர்கள் ஒஸ்தியான பரொஜக்டர்கள், சவுண்ட் தரத்தோடு படத்தை திரையிட்டால்தானே காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியாக உணர்வார்கள், என்று வருத்தப்படுகிறார் ஒஸ்தி பட தயாரிப்பாளர் ரமேஷ்.

    தனுஷை வைத்து உத்தமபுத்திரன் படத்தை தாயாரித்தவரும் பெரும் பொருட்செலவில் சிம்புவை வைத்து ஒஸ்தி படத்தை தயாரித்து வருபவருமான ரமேஷ் இது தொடர்பாக மேலும் கூறுவதாவது:

    படங்களை திரையரங்குகளில் திரையிடுவத‌ற்கு என்று விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளும் இருக்கின்றன. திரையரங்களில் படங்களை காண்பிக்க குறைப்பிட்ட அளவு துல்லியம் மிக்க புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. அதாவது 4கே அளவிலான துல்லியம் கொண்ட புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான எஸ் எம் பி டி ஈ வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும் .உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்ற‌ன.

    இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன.

    ஆனால் சமீப காலமாக பல திரையரங்குகளில் இவை பின்பற்றப்படவில்லை என்பது தான் வேதனை. பெரும்பாலான திரையரங்குகளில் 1 கேவுக்கும் குறைவான துல்லியமான காட்சியை தரக்கூடிய புரஜக்டர்களே இருக்கின்றன. முன்னணி திரையரங்களில் சிலவும் இதற்கு விதிவிலக்கல்ல!

    ஒரு சில மல்டிபிலக்ஸ் அரங்குகளில் ஒரு திரை தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்ற‌ன. இதனால் ரசிகர்கள் உயர்ந்த தரத்தில் காட்சிகளை பார்க்க முடியாமல் போகிறது. படங்கள் புள்ளி புள்ளியாக தெரியலாம்.

    த‌யாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிந‌வீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிரைவேறுவதில்லை. காரனம் தரக்குறைவான புரஜக்டர்களால் ரசிக‌ர்கள் உருவாக்கப்பட்ட தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை.

    அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முரையில் படங்களை பார்ப்பதால் கண்க‌ளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மெனையாம செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை.

    குறிப்பிட்ட சில திரையரங்குகள் தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்களே இருக்கின்றன. இந்த புரஜக்டர்கள் திரையரங்குகளில் திரையிட ஏற்றவை அல்ல. கருத்தரங்கு போன்றவ‌ற்றில் பயன்படுத்த மட்டுமே உகந்தவை.

    ஆனால் திரையிடல் தொழிலை கைக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இத்தகைய தரக்குறைவான புரஜக்டர்களை விநியோகித்து வருகின்றன. இதனால் ரசிகர்கள்தான் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

    திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞ‌ர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது.

    இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்ப‌துதான். ஆனால் இந்தியாவில் இவை சுத‌ந்திரமாக செயல்ப‌டுகின்ற‌ன. இது ஏன்?

    சில நிறுவன‌ங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றன‌ர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

    இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன்.

    திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக‌ இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

    திரையுலகை காப்பாற்ற‌ ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்", என்றார்.

    English summary
    Despite movies are produced by spending crores of rupees and with efforts from world class technicians, most of the cinema halls lack quality projectors and this makes audience to see low quality picture on screen, laments producer of 'Osthi', Ramesh,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X