Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த புகழ் மைனாவால் கிடைத்தது!- தம்பி ராமையா
மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. ஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும்.
ஆனால் மைனாவில் நடித்த பிறகு படத்தின் ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்டார் தம்பி ராமையா. படத்தைப் பார்த்த ரஜினியே, தம்பி ராமையாவை பெரிதும் பாராட்டியிருந்தார்.
சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னை பற்றி பேச வைத்தது 'மைனா' படம்தான் என நகைசுவை நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கூறினார்.
தம்பி ராமையா, இயக்குனர் தருண் கோபி ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று நடைபெற்ற மகா யாகத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
யாகாத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுவரை 50 க்கும் மேற்பட்ட சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் தம்பி பிரபு சாலமன்வின் மைனா படத்தில் நடித்ததுதான் என்னை சினிமா உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டது.
இந்த படத்திற்கு பின் அதிகளவு ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலமும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவிக்கின்றர் ரசிகர்கள். இப்போது கழுகு, கள்ள சிரிப்பழகா, வாகை சூடவா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்து வரும் பேச்சியக்கா மருமகன் என்ற படத்திலும் நடிக்கிறேன்," என்றார்.