Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எந்திரன் விநியோகத்தில் முறைகேடு... சக்சேனாவுக்கு எதிராக மேலும் புகார்!
அதிமுக அரசு பதவி ஏற்ற கையோடு, திமுக சார்புடைய பலருக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சன் டிவி, சன் பிக்சர்ஸ் மற்றும் அவற்றின் நிர்வாகிகளை நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. இதற்கு திரைப்படத் துறையில் சன் குழுமத்தால் பாதிக்கப்பட்ட சிலரே காரணமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
தீராத விளையாட்டுப் பிள்ளை விநியோகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க திரையுலகப் பிரமுகர்கள் சிலரே வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
விஜய் நடித்த காவலன் பட விநியோகம் தொடர்பான புகார், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட புகார் போன்றவற்றையும் சக்சேனாவின் இப்போதைய வழக்குடன் சேர்க்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் பட விநியோகத்தில் மோசடி செய்ததாக சக்சேனாவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.