Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தடையை நீக்குங்கள்- உள்துறைச் செயலாளரிடம் டேம் 999 இயக்குநர் நேரில் கோரிக்கை
டேம் 999 ஆங்கிலத் திரைப்படம் முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில் அந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தடைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி டேம் 999 திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் உள்துறைச் செயலரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தவிட்டது.
இதனையடுத்து இன்று காலை இன்று காலை சென்னை வந்த சோஹன்ராயை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம் சென்று, உள்துறைச் செயலாளரை இயக்குநர் சோகன் ராய் நேரில் சந்தித்தார்.
அப்போது, டேம் - 999 திரைப்படம் குறித்து அவர் விளக்கம் அளித்தார். மேலும், இப்படத்துக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தமிழக அரசு தனது விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் அளிக்கும், மேலும், தனது நிலையையும் அது அதில் வலியுறுத்தும். இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தனது உத்தரவைப் பிறப்பிக்கும்.