Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி: நடிகர் பாக்யராஜ் தாக்கு
கோவை: ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி. அவரைத் தேர்ந்தெடுத்தால் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பாரே தவிர மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தமாட்டார் என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக நடிகர் பாக்யராஜ் நேற்று புலியகுளம், திருச்சி ரோடு எல்.ஜி.பி, மட்டசாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு படாதபாடு படுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் இருந்த வைகோவையே ஒரு நிமிடத்தில் தூக்கி வீசிவிட்டார். அவருடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கும் அதே நிலை தான் ஏற்படும்.
ஒரு கேப்டன் வழிதவறி நடுக்கடலுக்குள் சென்றுவிட்டான். திரும்பி வர வழி தெரியவில்லை. உண்ண உணவின்றி கப்பலில் உள்ளவர்கள் தவிக்கின்றனர். பசிக் கொடுமை தாங்கமுடியாமல் ஒருவரையொருவர் அடித்துக் கொன்று மனித மாமிசம் சாப்பிடத் துவங்கினர். இதைப் பார்த்த கேப்டன் எங்கே தன்னையும் அடித்துக் கொன்று தின்றுவிடுவார்களோ என்ற பயத்தில் கப்பலின் மேல்தளத்திற்கு சென்றான். என் கைத்துப்பாக்கியால் என்னை நானே சுட்டுக் கொல்கிறேன், அதன்பிறகு என்னை சாப்பிடுங்கள் என்றான்.
தற்கொலைக்கு முயன்றாலும் யாராவது நம்மை காப்பாற்ற வரமாட்டார்களா என்று உள்ளுக்குள் ஏங்கினான். அவன் நினைத்த மாதிரியே ஒரு பெண் ஓடி வந்து அவனைத் தடுத்தாள். அவள் தான் அந்த கூட்டத்திற்கு தலைவி. அவன் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கினாள். அப்பாடா ஒருத்தியாவது வந்து காப்பாற்றினாளே என்று கேப்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டான். உடனே அவள் நீ தலையில் சுட்டால் மூளை சிதறவிடும். பிறகு என்னால் மூளைக்கறி சாப்பிட முடியாமல் போய்விடும். அதனால் நெஞ்சில் சுட்டுக் கொல் என்றாள். இதைக் கேட்ட அவன் மிரண்டு போய்விட்டான். அந்த கேப்டனின் நிலைமை தான் இந்த கேப்டனுக்கு விரைவில் வரப்போகிறது.
ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி. அவரைத் தேர்ந்தெடுத்தால் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாரே தவிர மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தமாட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியோ எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சுமூகமாகத் தீர்த்து, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவார் என்றார்.
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!