Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் காரசார விவாதம்!
சங்க தேர்தலில், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடக்கூடாது, என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூற, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசக்தி பாண்டியன், ஊழல் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால், குற்றம் சுமத்தியவர்கள் தண்டனையை ஏற்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ் சினிமாவின் பவர்புல் அமைப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவர் பதவியிலிருந்து ராம.நாராயணன் விலகியதை தொடர்ந்து பொறுப்பு தலைவராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
சங்கத்தில் கடந்த சில வருடங்களாக முறைகேடுகளும், ஊழலும் நடந்திருப்பதாகவும், அதுபற்றி விவாதிப்பதற்காக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் வற்புறுத்தினார்கள்.
அதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுக்குழுவை கூட்டாமலே தேர்தலை நடத்தலாம் என்று அவர்கள் கூறினார்கள். இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ராவுத்தர் இந்த தேர்தலில் அதிகாரியாகப் பணியாற்றுவார்.
பலத்த பாதுகாப்பு
தேர்தலுக்கு முன்பாக சில பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சிறப்பு கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாதுகாப்புக்காக, பிலிம்சேம்பர் வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. 'மது அருந்திவிட்டு வரும் உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை'' என்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருந்தன.
கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 2-30 மணிவரை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளிதரன், பொறுப்பு செயலாளர் கதிரேசன், பொருளாளர் காஜாமைதீன், முன்னாள் தலைவர்கள் கே.ஆர்.ஜி, இப்ராகிம் ராவுத்தர், முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர்கள் கேயார், சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், 'கலைப்புலி' எஸ்.தாணு, ஜி.சேகரன், ஏ.எல்.அழகப்பன், ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர்கள் பவித்ரன், தங்கர்பச்சான், ஷக்தி சிதம்பரம், நடிகர்கள் சரவணன், மன்சூர் அலிகான், கருணாஸ் உள்பட ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.
காரசார விவாதம்
கூட்டத்தில், காரசாரமாக விவாதம் நடந்தது. சிலர் மீது ஊழல் குற்றம்சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கூச்சலும், ரகளையும் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.
உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், செயலாளர் கே.முரளிதரனும் கேட்டுக்கொண்டார்கள். என்றாலும் கூச்சலும், குழப்பமும் அடங்கவில்லை.
கூட்டம் முடிந்த பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், "தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தவறு செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்படும். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதையும் மீறி அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், அவர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது,'' என்றார்.
முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், "இன்று நடைபெற்ற கூட்டம், பொதுக்குழு கூட்டம் அல்ல. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது. இருப்பினும், ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனையை ஏற்க தயார். அப்படி நிரூபிக்கப்படவில்லை என்றால், குற்றம் சாட்டியவர்கள் தண்டனையை ஏற்க வேண்டும்,'' என்றார்.