Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆசின் மீது நடவடிக்கை உறுதி-ராதாரவி ஆவேசம்

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவை ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமும் புறக்கணித்தது. தென்னிந்திய திரையுலகம் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்தித் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய நடிகர், நடிகைகள் போகவில்லை.
சல்மான் கான் போன்ற ஒருசிலர் மட்டுமே சென்றனர்.இதனால் கொழும்புப் படவிழா பிசுபிசுத்துப் போனது.
இந்தப் பட விழாவுக்குப் போனவர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக தென்னிந்தியத் திரையுலக கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால் இந்தத்தடையை மீறி தற்போது நடிகை ஆசின், சல்மான் கானுடன் இலங்கையில் முகாமிட்டுள்ளார்.
ரெடி என்ற இந்திப் பட ஷூட்டிங்கை வேண்டும் என்றே கொழும்பில் வைத்துக் கொண்டுள்ள சல்மான் கானுடன் சேர்ந்து நடித்துவருகிறார். இதனால் தமிழ்த் திரையுலகினர் கொதிப்படைந்துள்ளனர். ஆசினுக்கு தடை விதிக்கப்படும், எப்படி அவர் தமிழ் சினிமாவில் நடித்து விடுவார் என்று தமிழ்த்திரையுலகினர் கூறி வருகின்றனர்.
ஆனால் எத்தனையோ இந்தியர்கள் கொழும்பு போகிறார்கள்,கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள், சென்னையிலிருந்து விமானம் போகிறது, நான் போகக் கூடாதா என்று கேட்டு திரையுலகினரை கொதிப்படைய வைத்துள்ளார் ஆசின்.
இந்த நிலையில் படப்பிடிப்பு போக வேறு வேலைகளிலும் ஆசின் ஈடுபட ஆரம்பித்துள்ளார். வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் சேர்ந்து டூர் அடித்துள்ளார் ஆசின். அவரை தமிழர்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தின் பிராண்ட்அம்பாசடராக இலங்கை அரசு நியமிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் தென்னிந்தியத் திரையுலகினர் மேலும்கோபமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராதாரவி கூறுகையில், ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் ஏற்கனவே கலந்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் காரணமாக, அசின் மீதான நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டது. எனவே ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்போம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றார்.
ஆனால் ஆசின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.