Just In
- 1 hr ago
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
- 1 hr ago
தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!
- 1 hr ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
- 2 hrs ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
Don't Miss!
- News
சிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Sports
கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி.. செம ட்விஸ்ட்!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முல்லைப் பெரியாறு: முதல்வர் ஆணைக்காக திரையுலகம் காத்திருக்கிறது! - கேயார்

முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும், படஅதிபர் மற்றும் இயக்குனருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரள அரசியல்வாதிகள் 'அணை உடைந்துவிடும்' என்று பீதியை கிளப்பி இரு மாநில மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி வருகின்றனர்.
புதிய அணை கட்டுவதால் நிலநடுக்கம் வருவது தடுக்கப்படுமா? அப்படி வந்தாலும் புதிய அணை உடையாமல் இருக்குமா? என்பதை கேரள மக்களும், தலைவர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எப்போதெல்லாம், எங்கெல்லாம் பங்கம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்த் திரைப்படத் துறையும் இன உணர்வோடு தன்னை இணைத்துக் கொண்டு குரல் கொடுத்திருக்கிறது. அதற்காக போராடியிருக்கிறது. இப்போதும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டு மனம் விம்மிக்கொண்டு இருக்கிறோம்.
நமது கலைக்குடும்பத்தின் சகோதரியும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டால் முல்லை பெரியாறு பிரச்சினையில், தமிழர்களின் வாழ்வாதார உரிமையை நிலைநாட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் உயிரை பணயம் வைத்து போராட தயங்கமாட்டோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கேயார்.