Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முல்லைப் பெரியாறு: முதல்வர் ஆணைக்காக திரையுலகம் காத்திருக்கிறது! - கேயார்
முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும், படஅதிபர் மற்றும் இயக்குனருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரள அரசியல்வாதிகள் 'அணை உடைந்துவிடும்' என்று பீதியை கிளப்பி இரு மாநில மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி வருகின்றனர்.
புதிய அணை கட்டுவதால் நிலநடுக்கம் வருவது தடுக்கப்படுமா? அப்படி வந்தாலும் புதிய அணை உடையாமல் இருக்குமா? என்பதை கேரள மக்களும், தலைவர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எப்போதெல்லாம், எங்கெல்லாம் பங்கம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்த் திரைப்படத் துறையும் இன உணர்வோடு தன்னை இணைத்துக் கொண்டு குரல் கொடுத்திருக்கிறது. அதற்காக போராடியிருக்கிறது. இப்போதும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டு மனம் விம்மிக்கொண்டு இருக்கிறோம்.
நமது கலைக்குடும்பத்தின் சகோதரியும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டால் முல்லை பெரியாறு பிரச்சினையில், தமிழர்களின் வாழ்வாதார உரிமையை நிலைநாட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் உயிரை பணயம் வைத்து போராட தயங்கமாட்டோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கேயார்.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்